நாடளாவிய ரீதியில் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேர்ணல் தரப் பட்டங்களையும் உடனடியாக இரத்துச்செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டபின் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் இராணுவ தலைமைத்துவ பயிற்சி நடவடிக்கைகளை கல்வித் துறைகள், தொழிற் சங்கங்கள் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி முகாம்களில் வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சி வகுப்புக்களையும் உயர்கல்வி அமைச்சு இரத்துச் செய்துள்ளமை தெரிந்ததே.