Ad Widget

யாழ். பல்கலைக்கழக வீதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியிலுள்ள புகையிரதக் கடவை பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதால் ஆபத்து மிகுந்ததாகக் காணப்படுகின்றது.

uni-train-2

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும், புகையிரதப் பாதையில் வீதிக்கடவை இல்லை. அத்துடன் புகையிரதம் வரும் வேளையில் ஒலி எழுப்பும் கம்பமும் அவ்விடத்தில் பொருத்தப்படவில்லை.

யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் வீதியாக இருப்பதால், நாள்தோறும் பெருமளவானவர்கள் இவ்வீதியினைப் பயன்படுத்துவதனால் இங்கு பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாகவுள்ளது.

Related Posts