Ad Widget

யாழ். குடாநாட்டில் வேகமாக பரவும் டெங்கு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 447 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் இந்த நோய்த் தாக்கத்திற்கு இவ் வருடம் 3199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் அதிகமாக பரவியுள்ளது.

கொழும்பில் 870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 447 பேரும், கம்பஹாவில் 285 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 177 பேரும், குருநாகலில் 159 பேரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts