- Monday
- May 11th, 2026
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன்...
ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணையில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அறுபது வருடகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த...
வடமாகாண சபையால் யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பனை அபிவிருத்தி வாரத் தொடக்கமான இன்று புதன்கிழமையில் இருந்து இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு நிலையங்கள் , வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு முன்னெற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன....
அருள்மிகு மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழா. இன்று 21.07.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 14.08.2015 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசைத் தீர்த்தத்துடன் 25 நாட்கள் திருவிழா நிறைவுபெறும். திருவிழாக் கால முக்கிய நிகழ்வு 08.08.2015 சனிக்கிழமை திருக்கார்த்திகை 12.08.2015 புதன்கிழமை சப்பறம் 13.08.2015 வியாழக்கிழமை தேர் திருவிழா-காலை 8.45மணி வசந்த மண்டப பூசை...
தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக மதவழிபாட்டுத்தலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மதவழிபாட்டு தலங்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவருகின்றது. ஓருவர் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ஓருவர் குற்றவாளி...
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் எங்களது தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு ஏனைய இனங்களைப் போல் சகல உரிமைகளுடனும் தமிழர்கள் வாழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்கத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது. மின்னல் நிகழ்ச்சி நடத்தும் ஸ்ரீ ரங்கா , திரைக்குப் பின்னால் பேசும் பல விடையங்களை இணையத்தளங்கள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை அனைவரும்...
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம் ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய்...
நிர்வாகச் சீர்கேடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களால் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.07.2015) மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுத்தமில்லாமல் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பதார்த்தங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். சம்பவம்...
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால், ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நியூ சில்வஸ்டர் ஹோட்ட லில் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, மத்திய அரசாங்கத்துடன்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துர் எம்.கே.சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ரத்கமவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடும் சூழலை எனது அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்தது....
நீதியானதும் - சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயகோனுக்கே இந்த ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார் என ஜனாதிபதி செயலக அலுவலகம்...
தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த...
இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் பட்டமேற்படிப்புக்களுக்கும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பயிற்சி நெறிகளுக்கும் புலமைப்பரிசில்களை வழங்க சீன அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த தேசப்பிரிய தெரிவித்தார். த ஹஸ்ட் பல்கலைக்கழகத்தின் (The HUST (Huazhong University of Science and Technology) ) பேராசிரியர் சூ ஷியாலியான்...
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் காரில்...
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
எமது மக்களின் அன்றாட மற்றும் நிரந்தர பிரச்சினைகளிற்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கரங்களை பலப்படுத்த நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் எமது வளமான எதிர்காலத்தை அடைய முடியுமென ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். அரசியல் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகள், வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக இப்போதிருந்தே...
தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன்...
Loading posts...
All posts loaded
No more posts
