- Monday
- August 3rd, 2026
இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்' என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.மாவட்டத்தில் 144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜனவரி மாதத்துக்குரிய ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள. (more…)
யாழ். மதுவரி நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 601 மதுபான வழக்குகளினூடாக 16,64,300 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செந்தூர்செல்வன் நேற்று தெரிவித்தார். (more…)
சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர்களின் விழாவான தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொங்கல் கலை விழா யாழ் கல்வியியற் கல்லூரியில் 14ம் திகதி நடைபெற்றது. (more…)
யாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 தனிநபர் மிதிவெடிகளும், 534 தாங்கி எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டதாக வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். (more…)
யாழ்.மத்தியூஸ் வீதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஈச்சமோட்டையைச் சேர்ந்த மேரி புஷ்பம் என்னும் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டதாக பிரேதப்பரிசோதனைகள் உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றதாக சமவுரிமை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)
44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பிரீஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரிந்து வருவோர் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அரச முதியோர் இல்லத்தில் தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரியும் இவர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் அரச...
உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையாகும். (more…)
யாழ்.குடாநாட்டில் விவசாயிகளால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கை எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தாம் நட்டமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். (more…)
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என (more…)
இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திருறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா தலைமையில் 13 ஜனவரி 2013 அன்று நடைபெற்றது . (more…)
Loading posts...
All posts loaded
No more posts
