Ad Widget

பல்கலை. மாணவர்களை விடுதலை செய்ய கோரி யாழ். நகரில் கையெழுத்து போராட்டம் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது தாக்குதல்;கழிவு ஒயிலும் வீச்சு

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தை குழப்பும் நோக்குடன் இனந்தெரியாதவர்கள் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது பண்ணைப்பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கழிவு ஒயிலும் வீசப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலையும் மீறி கையெழுத்து போராட்டம் தொடர்வதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!
வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!
கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!
அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

என்ற கோஷங்களுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் இவர்கள் கையெழுத்திடும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

1

3

Related Posts