- Monday
- May 11th, 2026
பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள்...
பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா...
கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள்...
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால்...
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக வழக்கை தொடர்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரும்...
தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் "முதியோர் பராமரிப்பு டிப்ளோமா" "சமூக பராமரிப்பு டிப்ளோமா"கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல...
கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த...
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும் எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார். இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் ,...
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன. லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாவலனது பூதவுடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும்...
கன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் கொங்கிறீற் வேலை...
புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பதாக கூறிய போதும் 7000...
யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. மதவாச்சியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
இலங்கை - இந்தியாவை இணைத்து அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீதிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதிஉதவி பெற எதிர்பார்த்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். ராமேஸ்வரம் இலங்கை இடையே 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மதுரை- பரமக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு...
யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது. எனினும், அது உட்கார்ந்திருக்கும் நிலை மற்றும் எடை என்பனதான் பலரையும் சிந்திக்க வைத்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சிலை ஒரு...
புனித நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்ற முகமதியா ஜும்மா பள்ளிவாசல் பிரதான இமாம் எம்.ஐ மஹமூட் பலாஹி விசேட சொற்பொழிவை ஆற்றினார். இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பவானி பசுபதிராஜா வருடாந்த இடமாற்ற அடிப்படையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை வைத்தியசாலையில் தற்போது பிரதிப் பணிப்பாளராக உள்ள மருத்துவர் கே. நந்தகுமார் பதில்பணிப்பாளராக கடமையாற்றுவார். வருடாந்த இடமாற்றம் இந்த வருட ஆரம்பத்தில்...
தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு சர்வதேசத்தின் உதவி இன்றியமையாதது. இந்நிலையில் சர்வதேச ஆதரவைப் பெற்றிருக்கின்ற வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ரி.விக்கினராஜா தெரிவித்தார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவை வழங்கி சர்வதேசத்தையே வியக்க வைத்தது போன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் தமிழினத்தின் விடுதலைக்கான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கொலைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் போட்டியிட இடமளிக்கப்பட்டுள்ளது. முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுய விருப்பின் பேரில் இந்த இடத்தை வழங்கியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கே...
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க...
நேற்றய தினம் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற வர்த்தக நடவடிக்கை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வழக்காக காலாவதியான பொருட்கள் விற்பனை தொடர்பில் 11 கடை உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டது. இவ்வாறு காலாவதியான பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் ( பேஸ்வோஸ், கிறீம்) அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு...
Loading posts...
All posts loaded
No more posts
