Ad Widget

தமிழ் எம்.பிக்களின் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஐ.ம.சு.முவில் இடம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கொலைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் போட்டியிட இடமளிக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுய விருப்பின் பேரில் இந்த இடத்தை வழங்கியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கே கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறித்த நபர் தமிழ் எம்.பிக்களின் கொலையில் நேரடியாகப் பங்கேற்றார் என்பதற்கான ஆதாரங்கள் முழுமையாகத் தன்னிடம் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த நபரின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

Related Posts