Ad Widget

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு நிலையங்கள் , வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு முன்னெற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 146 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.அதேபோல கிளிநொச்சி மாவட்டம் உள்ளடங்கலாக 5 இலட்சத்து 29ஆயிரத்து 239 பேர் இம்முறை வாக்களிக்கவுள்ளனர்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வாக்களிப்பதற்காக வழமைபோன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts