- Friday
- April 26th, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்படக்குழு, சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியாவை மையப்படுத்தி, இயக்குநர் கே.கணேசன் என்பவரால் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது....
நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஸ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார். வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'சிறுவயது திருமணங்கள் நாட்டில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் சற்றுமுன்னர் நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமே இந்த நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.
இந்தியாவில் வீசும் கடுமையான வெப்பக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் வீசி வரும் இந்த வெப்பக்காற்று காரணமாக சில பகுதிகளில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸைத் எட்டியுள்ளது. தென் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவிலேயே வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர்....
தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஒருவனின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் வீதியில் திங்கட்கிழமை (25) நின்றிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் சென்று 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் காரைநகர் பரமநாதன் அபிராம்...
பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து...
இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய்...
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் எதிரொலியாக யாழில் இடம்பெற்ற போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்களில் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களைத் தவிர ஏனையோர் விரைவில் விடுவிக்கப்படுவர். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார் என அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுரேஷ்...
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது. புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப் பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வ மத வழிபாடுகளும் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறுந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்...
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண...
வடக்கில் பணியாற்றிவரும் காவல்துறையினர், எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மனிதாபிமான முறையில் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாறாக, எமது மக்களை அடிமை கொண்டவர்களைப்போல் கருதி, ஆதிக்க மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...
யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீது கடந்த 20 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வீடியோ, புகைப்படங்களை எடுத்தவர்கள் அவற்றைத் தந்துதவுமாறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கேட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலையைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டனர்....
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்.வேம்படி உயர்தரப் பாடசாலையில் வைத்து உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தீடீர் பயணமாக ஜனாதிபதி...
யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 20ம் திகதி புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் யாழில் நடைபெற்றது. அதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பலர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதன்...
கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கப் பனை விருதை வென்றுள்ளது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை எடுத்துக் கூறும் தீபன் திரைப்படம்.ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முறையாக பதிவு செய்த முதல் ஐரோப்பியத் திரைப்படம் இது. இயக்கியிருப்பவர் ஈழத் தமிழர் அல்ல மாறாக பிரான்சின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜக்குவாஸ் ஓடியேட். ஈழத்தமிழரின் அவல...
புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இந்த தடையுத்தரவு...
Loading posts...
All posts loaded
No more posts