Ad Widget

அனந்தியின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டுகோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். பண்ணாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெளியில் வந்து பார்த்த போது உயரமான கோர்ட் அணிந்த ஒருவர் வீட்டுக்கு அருகிலிருந்து...

நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி

நியூஸிலாந்தின் தென் தீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த...
Ad Widget

ரசிகர்களை நெகிழவைத்த டேவிட் வோர்னர்

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள 4 ஆவது டெஸ்ட் போட்டியில் அரங்கத்தை நெகிழவைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகின்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பெடுத்தாடிவரும் டேவிட் வோர்னர் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் கடந்த சில...

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதி

வீட்டிலில்லாமை மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபயரட்ன தெரிவித்தார். வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட தினத் தன்று அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலில்லாமை அல்லது தபாலில் ஏற்பட்டிருந்த ஏதேனும்...

போலிப் பிரசாரங்களை நம்பாதீர்கள்! அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!!

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஜனாதிபதி தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் 191 வாகனங்கள்

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பேருந்துகள் என 191 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் 63 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் தெரிவித்தார். பருத்தித்துறை சாலையிலிருந்து 10 பேருந்துகளும், காரைநகர் சாலையிலிருந்து 10...

காங்கேசன்துறை வரையான ரயில் சேவையின் புதிய நேர அட்டவணை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டதையடுத்து புதிய ரயில் சேவை அட்டவணையை யாழ். பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் திங்கட்கிழமை (05) வெளியிட்டார். குளிரூட்டிய கடுகதி ரயில் காலை 5.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு 11.56 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து...

அனைவரும் தவறாது வாக்களிக்களிக்குமாறு கோரிக்கை

நாட்டில் ஜனநாயக சூழலை ஏற்படுத்த மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்குமாறு அடக்குமுறைகளுக்கெதிரான அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் பேசும் மக்கள் அனைவரும்...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வீதிகள் மூடப்படும்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 2015 ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை யாழ். நகரப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்யலங்கார, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். காந்தி வீதி,...

மஹிந்தவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மீது வாள்வெட்டு

யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த...

‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று மஹிந்தவும் கூறியிருக்கிறார்

'பிரபாகரனை நான் 'மிஸ்டர் பிரபாகரன்' என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய...

வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...

மைத்திரிக்கு த.தே.கூ நிபந்தனையற்ற ஆதரவு – அங்கஜன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற விதத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...

ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம் – அரச அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ்....

படையினரின் அச்சுறுத்தலால் கிளிநொச்சியில் ஒரு குடும்பம் பீதியில்!

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருமலையில் தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...

தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

வடக்கு மக்களை குழப்ப சதி: நம்ப வேண்டாம் என்கிறார் சிவிகே

வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு...

ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது: அதிகாரப்பூர்வ தகவல்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ. இன்று அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts