Ad Widget

கோடரியால் வெட்டப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்!

பளை வேம்பொடுகேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கோடரி வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் கோடரி வெட்டு இடம்பெற்றதாகவும், அதன்போது இதே இடத்தைச் சேர்ந்த ஜெயராஜா சிவநேசன் (வயது-38) என்பவர் படுகாயமடைந்து பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இப்பகுதியைச் சேர்ந்த இருவரை பளைப் பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts