- Saturday
- May 18th, 2024
ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் . இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட...
யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை...
போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக கூறப்படும் கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின்...
இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று...
யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை...
இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிறுநீரக மாற்று மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும் இதற்கான தொடர்பாடல் சாதனமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தியாவின் ஹைதராபத் நகரில் நேற்று 4 நோயாளிகளும், ஒரு வைத்தியரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், 2 மடிக் கணினிகள், 6 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில்...
யாழ்.பண்டத்தரிப்பு சந்தியில் செவ்வாய்க்கிழமை (17) துவிச்சக்கரவண்டி மீது தனியார் பஸ் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த ரி.பகீரதன் (வயது 28) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இளவாலை மற்றும் யாழ்ப்பாணப்...
யாழ்.மாநகர சபை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு பகுதியில் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்தக்கோரி நவாலி, ஆனைக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் பகுதி பகுதிகளாக...
சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும். கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள்...
ஆவரங்கால் மந்திரிமனை ஜே-277 பகுதியில் அமைந்துள்ள வீடொன்று திங்கட்கிழமை (16) மாலை தீக்கிரையாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தனர். வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றாக எரிந்தமையால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் சாமி அறையில் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்த தீ, வீடு முழுவதுமாக பரவியதாக விசாரணைகளின் மூலம்...
இளவாலை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகளை ஞாயிற்றுக்கிழமை (15) தீயிட்டு எரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேந்தான்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பேரை திங்கட்கிழமை (16) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். எரிந்த படகுகளுக்கு அருகில் கிடந்த பெனியன் மற்றும் லைற்றர் ஆகியவற்றை கொண்டு மோப்பநாயின் உதவியுடன் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சந்தேக...
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின்...
இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல கூடும். அதற்கு இலங்கை இடமளிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என வடக்கு முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இணைந்து உள்ளூராட்சி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் தனது வரவேற்புரையிலும் முதல்வர்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி கொடுத்து டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. அதே போல் தினேஷ் கார்த்திக்கை ரூ.10.5 கோடி கொடுத்து ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது. 23 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 67 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். மொத்தமாக செலவிடப்பட்ட தொகை ரூ.87.6 கோடி....
"இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து - அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். "கிழக்கு மாகாணத்திற்கு...
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில்...
இளவாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் இரண்டு படகுகள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (16) தெரிவித்தனர். சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன தீயால் எரிந்துள்ளன. இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரின் கைப்பையில் இருந்த நகைகள் திருட்டுப்போன சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர். பெண்ணொருவர் தனது சிறிய கைப்பையை தனதருகில் வைத்துவிட்டு, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த தருணம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதனை திருடிச் சென்றுள்ளார். அலைபேசியில் உரையாடிய பின்னர், தனது கைப்பையை தேடியபோதே...
Loading posts...
All posts loaded
No more posts