Ad Widget

எழுதுமட்டுவாளில் இனந்தெரியாத சடலம்!!

எழுதுமட்டுவாள் பகுதியிலும் தலையும் முகமாலைப் பகுதியில் முண்டமுமாக சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு எழுதுமட்டுவாள் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் தலையும் முகமாலைப் பகுதியில் அதன் முண்டமும் காணப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சடலத்தை மீட்ட பளை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts