Ad Widget

வடக்கிலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவதையே தாம் விரும்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்னும் 150,000 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அதாவது ஐந்து அல்லது ஆறு பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் காணப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். இதனால் அவர்கள் வௌியேறுவதையே தாம் விரும்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts