கடற்படையினரின் வாகனம் மோதி முதியவர் காயம்

கடற்படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தினைச் சேர்ந்த 60 வயது முதியவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். யாழ். நகரப் பகுதியில் கருவாட்டுக் கடை வைத்திருக்கும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் கருவாடு கொண்டு சென்ற போதே மண்டை தீவு...

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு ரிஷாட் எதிர்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா - நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
Ad Widget

தமிழக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி எங்கே?

சென்ற வருடம் தமிழகத்தில் தொடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வழங்குவதற்கென வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதியானது தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். நிதி சேகரிக்கும் பணி முடிந்த நிலையில், வட மாகாண சபையால் சேகரிக்கப்பட்ட நிதியான 4 இலட்சத்து 94...

தொலைபேசிக் கட்டணம் 17 சத வீதத்தால் உயர்வு!

புதிய வற் வரி மீளாய்வின் காரணமாக தொலைபேசிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுவந்த 25 சதவிகித வரி 42 சத வீதமாக அதிகரிக்கப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொலைபேசிகளுக்கான தற்சமயம் அறவிடப்படும் தொலைத்தொடர்பு வரியான 25 சதவீதம் எதிர்வரும் மே மாதம் முதல் மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதுடன் மேலும் இரண்டு சதவீதம் தேசத்தைக் கட்டியெழுப்பும்...

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞரைத் தண்டிக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார். பேசாலை உதயபுரம் கிராமத்தை சேர்ந்த 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனியார் வகுப்பிற்குச் சென்ற போது வீதியில் நின்ற இளைஞன் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, அருகிலுள்ள கடை ஒன்றிற்கு சென்று இதுபற்றி முறையிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது....

சங்கானை, சித்தன்கேணி பகுதிகளில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

சித்தங்கேணி, சங்கானை ஆகிய இடங்களில் இரு வீடுகளில் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு, மற்றும் கம்பிகளால் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் சித்தங்கேணி சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் கொள்ளையர்கள் பின்புறம் இருந்த கதவை உடைந்து கொண்டு உட் சென்றுள்ளனர். மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டில் இருந்தவர்கள் மீது...

இலங்கையில் பேஸ்புக் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் பேஸ்புக் தொடர்பில் 650 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட, தகவல் தொழில் நுட்பப்பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஒருவருடைய...

கிளிநொச்சியில் 3700 ஏக்கர் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 3701.5 ஏக்கர் நிலம் முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே இந்த நிலங்கள் காணப்படுகின்றன. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன. அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5...

குமுதினி பயணிகள் படகின் சேவை நேரத்தில் மாற்றம்

குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகு, நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு, ஞாயிற்றுக்கிழமை (24) தொடக்கம் காலை 8 மணிக்கு புறப்படும். இந்த நேரமாற்றம் மறு அறிவித்தல் வரை கடைப்பிடிக்கப்படும்...

நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை

புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். யாரும் இல்லாத...

சவுக்குகாட்டை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

மணற்காடு சவுக்குகாட்டை சுற்றுலா இடமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். உலக பூமி தினத்தை முன்னிட்டு வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்று 1,500 தொண்டர்களின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடமராட்சி கிழக்கிலுள்ள பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாற்றும்போது,...

யாழ். சிறைச்சாலையில் அலைபேசிகள் மீட்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 18இற்கு மேற்பட்ட அலைபேசிகளும் சிறுதொகை கஞ்சா பொதி மற்றும் மதுசார குப்பிகள் சிலவும் கைப்பற்றபட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.எம்.என்.சி.தனசிங்கே தெரிவித்தார். சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்தேடுதல் நடவடிக்கை இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர்...

யாழ். நகரில் இளைஞர் குழு அட்டகாசம்

யாழ். நகரின் மத்தியின் மூன்று பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த இளைஞர் குழு சொத்துக்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இளைஞர் குழுவின் இந்தத் தாக்குதலுக்கு 3 வீடுகளும் ஹோட்டல் ஒன்றும் இலக்காகியிருக்கின்றன. அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தென்னிலங்கையிலிருந்து வந்த சொகுசு பஸ் ஒன்றும் சேதமடைந்துள்ளன. மேலும் வீடுகளின் யன்னல் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன....

நாளை முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகளை நாளை 24 ஆம் திகதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இந்த கையேட்டைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்காக...

சம்பந்தரின் குத்துக்கரணம்! ஊடகவியலாளர்கள் மூவர் ராஜினாமா?

அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார்....

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் சுவாமிநாதன் விளக்கம்!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார். அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும். இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து...

இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் ஒன்றுகூடல்

இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு: Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு ஊடக அறிக்கை திகதி: 24/04/2016 இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை இலங்கை சமூக...

யாழில் வடக்கு தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல்

வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும் வகையிலும் ,நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் “பனை ஓலையும்,தென்னை ஒலையும்” எனும் தொனிப்பொருளிலான தமிழ்- சிங்களப் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றன. தென் மாகாணத்திலிருந்து 100 மாணவர்கள்...

விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் செயற்படுவதாகக் கூறியும் உடனடியாக இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரிக்குமாறு வலியுறுத்தியும் பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. பொலிஸார் விசாரிக்க...

தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பில் 23 பேர் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் 23 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 8 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வதாக கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர் முன்னாள் போராளிகள் என்றும், அவர்களில் சிலர் அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts