கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கைத்தொலைபேசியைப் பாவித்துக்கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான்.
குறித்த சம்பவம் தொடர்பில் இறந்த மாணவனின் சகோதரி கூறுகையில்,
தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான்.
அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான். அவன் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியெய்தியபோது அந்தப் போனை தந்தை அவனுக்குப் பரிசளித்தார்.
தம்பி போனில் விளையாடிக்கொண்டிருக்கும் சமயம் இடியுடன் கூடிய மழையும் பெய்துகொண்டிருந்தது.
அந்த நேரம் தம்பி அக்கா என்று கூப்பிட்டான்.
நான் சென்று பார்த்தபோது அவன் கட்டிலிலிருந்து சிறிதுதூரம் முன்னுக்கு விழுந்திருந்தான்.
நான் தம்பி என்று அழைத்தபோது சத்தமெதுவுமில்லை. தொட்டுப்பார்த்தபோது விறைத்துப்போயிருந்தான். நான் பயத்தில் எல்லோரையும் கத்தி அழைத்தேன் எனத் தெரிவித்தார்.