Ad Widget

கையூட்டல், ஊழல், முறைகேடுகளை ஒழிப்பதே பிரதான நோக்கம்

இலங்கையினுள் ஊழலை ஒழிப்பதே தற்போதைய அரசின் பிரதான நோக்கம் என அதிபர் மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ma

பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன லண்டன் நகரில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

கையூட்டல், ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை தடுப்பதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மைத்திரி , இதன்போது உலக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையில் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 அளவில் இந்த மாநாடு ஆரம்பமானமை குறிப்பிடதக்கது.

Related Posts