Ad Widget

நாடு முழுவதும் அதிகளவிலான மழை பெய்யலாம்?

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும், கடலோரங்களிலும் இன்று(13) அதிகளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, மற்றும் தென்பகுதிகளில் மழைக்கான காலநிலையுடன் மேகமூட்டம் காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு வேளையிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.

மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் மேல் மற்றும் தென் கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts