Ad Widget

ஐநா வில் எழுப்பபடும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்

சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் இந்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினால் இனங்காணப்பட்ட சித்திரவதை சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாறாக அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவை அமர்வில் எழுப்பபடும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Posts