- Thursday
- March 5th, 2026
வடக்கு மாகாணத்தில் முன்னரும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றதாகவும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்திலேயே குற்றச் செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன என வடக்கு மாகாண முதல்வர் தெரிவித்திருந்த...
கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது...
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு...
அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ...
"நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது." - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல்...
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த...
இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகரித்துள்ள போதைவஸ்து பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள் குழுவுக்கும் வடக்கு மீனவசங்க தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்டுள்ள கேரளா கஞ்சா வகைகள் அதிகளவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக யாழ்...
ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு...
யாழ்.குடா நாட்டு நீர் மாசடைந்திருப்பதால் தனக்குத் தேவையான குடிநீரை கொழும்பிலிருந்தே கொண்டுசெல்வதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குடா நாட்டில் சீரற்ற கழிவகற்றல் கட்டமைப்பு இன்மையினால் குடிநீர் மாசடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இதனால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகக் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...
புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது. இதேவேளை,...
அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருதுவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வீட்டிலிருந்த நிலையில் குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பெண் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால்...
இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைவோரை பாதுகாக்குமாறு ஜெனீவா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளிடம் உதவிகோரியபோது எவரும் உதவி வழங்க முன்வரவில்லை என அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மீது உண்மையான...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு மேற்குப் பக்கமாகவுள்ள சூரிய சைவ உணவக கட்டடத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி, ஒன்றுகூடலுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்களையும் பணியாளர்கள் இல்லாதவிடத்து பணியாளரின் குடும்ப அங்கத்தவர்களையும் தவறாது...
சர்வதேச புகைப்பிடித்தலுக்கெதிரான தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் புகையிலை போதைப்பொருள் தொடர்பான தேசிய அதிகார சபை என்பன கூட்டாக இணைந்து பாடசாலை மாணவர்களிடையில் கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளன. இப்போட்டியில், ஆரம்ப பிரிவைச் சேர்ந்த 3ஆம், 4ஆம் தர மாணவர்களிடையே 'புகைபிடிக்காத எனது அப்பா எமது சொத்தாகும்' என்னும் தலைப்பிலும், கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த 6ஆம்...
யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து...
அளவெட்டி கூட்டுறவுச் சங்க கடைக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பிரசன்னா (வயது 21) என்ற...
தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்....
கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கைத்தொலைபேசியைப் பாவித்துக்கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான். குறித்த சம்பவம் தொடர்பில் இறந்த மாணவனின் சகோதரி கூறுகையில், தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான். அவன் யார் சொன்னாலும்...
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார்...
Loading posts...
All posts loaded
No more posts
