Ad Widget

கவனயீர்ப்பு கையெழுத்துப் போராட்டம்

முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டிலான கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.

Capture

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் அடக்குமுறைச் சட்டங்களை சுருட்டிக்கொள்ள வேண்டும் மற்றும் அனைத்து அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், மேலதிகமாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறும் இதன்போது கோரப்பட்டது.

மேலும், ‘இது ஜனநாயகமா?’ என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

Related Posts