Ad Widget

மாணவியைக் காணவில்லை!

யாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்ற இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.

இதன்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts