உகாண்டா ஜனாதிபதி பதவியேற்பில் கலந்து கொண்ட மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகாண்டா ஜனாதிபதியின் பதிவியேற்பு விழாவில் நேற்று (12) கலந்து கொண்டார். உகாண்டா அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விழாவில் கலந்து கொண்டதாக அவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்ற அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் 61% வாக்குகள் பெற்று...

கையூட்டல், ஊழல், முறைகேடுகளை ஒழிப்பதே பிரதான நோக்கம்

இலங்கையினுள் ஊழலை ஒழிப்பதே தற்போதைய அரசின் பிரதான நோக்கம் என அதிபர் மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன லண்டன் நகரில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். கையூட்டல், ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை தடுப்பதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து...
Ad Widget

ஐநா வில் எழுப்பபடும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்

சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் இந்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை...

உருத்திரகுமாரன் செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும்

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும் என்று தமிழக திரைநட்சத்திரம் சத்யராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி நிகழ்வுக்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்...

பசிலின் மனைவிக்கும் மகளுக்கும் அழைப்பு

மாத்தறையில் காணியொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மாத்தறை நீதிமன்ற நீதவான் யுரேஷா டி சில்வாவினால், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பிலுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, அவர் நேற்று வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். அப்பிரிவுக்கு...

நாடு முழுவதும் அதிகளவிலான மழை பெய்யலாம்?

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும், கடலோரங்களிலும் இன்று(13) அதிகளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, மற்றும் தென்பகுதிகளில் மழைக்கான காலநிலையுடன் மேகமூட்டம் காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு வேளையிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய...

இளம் கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டு கொலை!

வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...

50% அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளர்

பல்கலைக்கழகத்தினுல் நம்பமுடியாத சித்திரவதைகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது, பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து, 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் இவ்வாறான பகிடிவதைகளை எதிர்ப்பதாகவும்,...

வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...

பஷில் பிணையில் விடுவிப்பு

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து, மாத்தறை நீதவான் உரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதி குற்ற விசாரணைப்...

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடம் ஆண்டுக்கு 55,000 மெற்றிக்தொன் உற்பத்தி

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 4,200 ஹெக்டயர் பரப்பளவில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (12.05.2016) விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும்...

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள்...

பள்ளிக்குடாவில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!

பூநகரி – பள்ளிக்குடாப் பகுதியில் சிறீலங்காக் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் பணி அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் காணிகளை அளவீடுசெய்வதற்காக நிலஅளவையாளர்கள் அங்கு சென்றிருந்தவேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பணி இடை நிறுத்தப்பட்டது. குறித்த காணி தேவாலயத்திற்குச் சொந்தமான காணி...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் 'முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்’ இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், அகவணக்கம் செலுத்தி...

பசில் ராஜபக்ஷ கைது!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகி போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடூர பகிடிவதை- இடைநடுவில் கல்வியை கைவிட்ட மாணவி!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார். இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார். பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை...

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்யக் கோருகிறது அமெரிக்கா!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின்...

பேரவையின் தீர்வுத் திட்டம் அமெரிக்காவிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு நேற்றய தினம் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் இதனை நேரடியாகக் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்கக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து! ஐவர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் நேற்று அதிகாலை புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த அதி சொகுசு பஸ் நேற்று அதிகாலை 3.15 மணியளவில்...

விரைவில் இலங்கையிலும் இ-மோட்டர் முறையில் வாகனங்களைப் பதிவுசெய்யலாம்!

உலகிலே பெருமளவான நாடுகளில் வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு இ-மோட்டர் முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இ-மோட்டர் முறை சிறீலங்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறீ பால டி சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களம் ஒன்றின் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...
Loading posts...

All posts loaded

No more posts