இராணுவ வாகனத்துடன் மோதி கிராமசேவையாளர் படுகாயம்

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ ஹப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கிராமசேவையாளர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 9 மணியளவில் தெல்லிப்பளை சந்தியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நுணாவில் ஜே-309 கிராமசேவையாளராக கடமையாற்றும் ஐயாத்தம்பி...

வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்

கைதடி, நாவற்குழி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இனந்தெரியாதோர் சிலர், அந்த வீட்டிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட நால்வர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், கேதீஸ்வரன் சுகந்தன் (வயது 25) அவரது மனைவி சுகந்தன் நமீரா (வயது 26), இவர்களது குழந்தை சுகந்தன் கிருத்திகன் (1...
Ad Widget

பிரித்தானிய பிரதிநிதிகளுடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிகரெட் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படகூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(06) மாலை தென்பட்டதனால் இன்று(07) ரமழான் புனித நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை கூடிய தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உட்பட கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம் அமைப்புகளின்...

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம் யாருடையது?

நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை...

பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பில் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, அவர் பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்

தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதனை செவ்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும், கல்வி இராஜாங்க அமைச்சரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர்...

யாழில் பொலிசாரால் சிறைப்பிடிக்கப்பட்ட அதி சொகுசு பஸ்!

யாழ் – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பஸ் ஒன்று உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமை, அனுமதிப் பத்திர உண்மைத் தன்மையில் சந்தேகம் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நேற்றைய தினம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பஸ் ஒன்று உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினாலும், குறித்த அனுமதிப் பத்திரத்தின்...

எனது அரசியலை தொடர்ந்து கொண்டு செல்பவரை இறைவனே தீர்மானிப்பார்!

வடக்கில் படையினர் வசம் உள்ள பல காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள் தகவல்களை தரவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார். அவர் யாழ்ப்பாண செய்தியாளர் யாழ்.தீபனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்:- கேள்வி: வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் எதுவரை எந்தளவில் வெற்றியளித்துள்ளன? பதில்: தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து...

கவனயீர்ப்பு போராட்டத்தில் சமூக சுகாதார தொண்டர்கள்

யாழ்ப்பாணம் - பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை 8.30 முதல், சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வட மாகாணசபைக்கு முன்பாக பல தடவையும் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் தாங்கள்...

பசில் ராஜபக்ஷ கைது!

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மாஅதிபர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்தில் தற்சமயம் தலைவிரித்து ஆடும் சட்ட ஒழுங்கு சீரற்ற கொலை, கொள்ளை நடவடிக்கைகளை நேரடியாக தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முகமாக யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மாஅதிபர் பூசித ஜயசுந்தர அனுப்பிவைக்கப்படுவார் என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி...

தென்மராட்சியில் மூன்று இடங்களில் இ.போ.ச பேரூந்துகள் மீது தாக்குதல்

தென்மராட்சி பிரதேசத்தின் மூன்று இடங்களில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்துகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். அடையாளந் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பேரூந்தின் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதோடு, பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. முதலாவது தாக்குதல் கிளிநொச்சி சாலைக்குச்...

அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி

வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்....

அரசாங்க வேலைகளில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிப்பு

'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின்...

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்

ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக்...

17 மணித்தியாலங்களுக்குப் பிறகு இரண்டு குண்டுகள் வெடித்தன

கொஸ்கம இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன.

பலத்த காற்று வீசும்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் அடிக்கடி பலத்த காற்று வீசும் சாத்தியமுள்ளதால் கடலுக்கு செல்வோர் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரை மற்றும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர்...

தமிழ் மக்கள் பேரவையுடன் சர்வதேச சட்ட வல்லுனர் பிரான்சிஸ் பொயில்!

தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவின் சர்வதேச சட்ட ஆலோசகராக சர்வதேச சட்ட வல்லுனரும், பிரபல்ய போர்க்குற்றம் மற்றும் இனஅழிப்பு சட்ட வல்லுனருமாகிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் இணைந்துள்ளார். ஒரு உள்ளக விசாரணைகூட இம்மியளவும் நகராத நிலையில், அதுவும் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சேர்த்துகொள்ளப்படமாட்டார்கள் என செய்திகள் வரும்...
Loading posts...

All posts loaded

No more posts