இன்னும் 24 மணி நேரத்தில் சுறாவளி: கனமழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய...

யாழில் மூன்று சந்தேகநபர்கள் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை யாழ். சிறுகுற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்தியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரைனட் 01 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் 2 உட்பட பல பொருட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன....
Ad Widget

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

அல்வாய் கிழக்கு, வெள்ளுர்ப் பகுதியில் வசித்த இராசநாயகம் அஜந்தன் (வயது 20) என்ற இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்தபோது நேற்று புதன்கிழமை (18) மாலை மின்சார தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (19) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை...

இயற்கை சீற்றத்தினால் நான்கு இலட்சம் பேர் பாதிப்பு;இலட்சக்கணக்கானோர் முகாம்களில்

தொடர்ச்சியாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சமாக அதிகரித்திருப்பதோடு, மூன்று இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 94 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து மூவாயிரத்து 682 பேர்...

யுத்த வெற்றி மகிழ்வைத் தந்தாலும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் வேதனையைத் தருகின்றது!

மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மகிழ்ச்சியைத் தந்தாலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கவலையளிக்கின்றன. பத்தரமுல்லையில் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், மூன்று தசாப்த காலமாக தொடர்ந்த போர் முடிவுக்குக் கொண்டுவந்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட...

பெருக்கெடுத்து ஓடும் களனி கங்கை நீரில் மிதக்கும் கொழும்புநகர்!

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், களனிகங்கையின் நீர்மட்டம் 7 மீற்றர்வரை உயர்ந்து பெருக்கெடுத்துப் பாய்வதால் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் களனி கங்கையின் கரையோரமாக உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள்,...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணித்த மூவர்!!

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக...

தடுப்புக் காவலில் உள்ள இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும்

மூன்று தகாப்தமாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்து 07 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறுவது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவத்தினரை கைது செய்வதற்காக அரசாங்கம் பயன்படுத்தும் போலியான மற்றும் கீழ்த்தரமான காரணங்கள் தொடர்பாக நீதிபதிகள் திறந்த நீதிமன்றங்களில் ஆச்சர்யம் வெளியிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போர்...

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலங்கபிட்டிய பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரநாயக்க சென்றார் ஜனாதிபதி

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தங்களிற்கு முகம் கொடுத்தோர் 1919 க்கும் அழைக்கலாம்!

அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் எவராயினும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி தகவல் அறிவிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் அறிவித்தும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு இதுவரையும் அரச அதிகாரிகள் எவரும் விஜயம் செய்யவில்லை எனில் அல்லது அரச அதிகாரிகள் எவரதும் உதவிகள் இன்னமும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்”...

றிச்சாட் ஆமிற்றேஜ் அவர்கள் இரா சம்பந்தனையும், எம் ஏ சுமந்திரனையும் சந்தித்தார்

நேற்று பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன. இதனையடுத்து, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக்...

அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் அனைத்தும் இரத்துசெய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி படுகொலை: மரபணு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த மரபணு அறிக்கை இன்றைய தினம் பெரும்...

யாழ் பல்கலையில் நினைவேந்தல் நிகழ்வு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

வடக்கில் தடையின்றி நினைவுதினம் அனுஷ்டிக்கமுடியும்!

உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தமுடியும். இந்தச் செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையின் எந்தவொரு தலையீடும் இருக்காது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து...

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்- முள்ளிவாய்காலில் விக்னேஸ்வரன்

சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...
Loading posts...

All posts loaded

No more posts