Ad Widget

பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பில் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, அவர் பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts