நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெடுந்தீவு பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.