- Thursday
- March 5th, 2026
ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் கிழக்கில் - பி.ப 3.30 மணி (புனித சின்னப்பர் ஆலய வீதியால் செல்லும்...
பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்கின்றன. குளிர்விலகும்போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன. வலசை போகும் இந்தப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்...
ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....
தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவரருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இரா.சம்பந்தன் இந்தியாவின் முன்னணி பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு...
பிரபாகரன் போன்ற ஒருவர் இனிமேல் வரவே முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்டிருந்த போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களைப்போல் எவரும் யுத்த கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள். இழப்புகள் என்றால் என்ன, வலி...
நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்றய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை...
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள முகநூல் பதிவில் என் நண்பர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இன்னாள் அரச அதிகாரி. அவரது கருத்துகள் தேவையற்ற...
யாழில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்துமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஷ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சேரி ஒழுங்கையுடாக வந்த வாகனத்துடன் முச்சக்கர வண்டி ஒரு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கர வண்டியில் இருந்த முன்று நபர்கள் படுகாயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொஸிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி அதிவேகமாக பயனித்த காரணமாக இவ்...
இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார். பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பக்கச்சார்பாக நடத்தல் ஆகியவை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். பொலிஸாருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள...
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதியதாகக் கூறப்படும் 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட மற்றும் நாடகக் கலை இயக்குநரான தர்மஸ்ரீ பண்டார நாயக்க வெளியிட்டுள்ள இந்த நூலை, 'தியுனு அஸிபத்தக செவன...
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து சிறீலங்கா விமானப்படை கடல் வான் மீட்பு ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஹிங்குராகொடவை தளமாகக் கொண்ட சிறீலங்கா விமானப்படையின் 7ஆவது உலங்கு வானூர்தி அணியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையில், சிறீலங்கா விமானப்படையின் சிறப்புப் படையினர், விமான ஓட்டிகள், சுடுநர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களும் பங்குபற்றினர். மீட்புப் பணிக்கான உயிர்காப்பு வீரர்கள் மற்றும்...
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் சர்வதேச அளவில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி வலசைப் பறவைகள் பற்றிய அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்குடன் வடக்கு...
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பன VAT வரியினை சாட்டிக் கொண்டு நோயாளிகளிடம் கூடுதலான பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு ஒன்று மக்களிடையே எழுந்துள்ளது. VAT வரி திருத்தத்திற்குள் மறைந்துகொண்டு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில், நோயாளர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக இலங்கை வைத்திய இரசாயனகூட ஆய்வுகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 15 வீதத்தால்...
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதன் பிரகாரம் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர்...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கு தொடக்கம் நாகவிகாரை வரை வெசாக் வலயம் அமைக்கப்படும் எனவும் வடக்கில் 12 விகாரைகளில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிலையில், தமது மகளின் கொலை தொடர்பாக, வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில்- எனது மகளுக்கு இந்த கொடூரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி...
யாழ் மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாத சுமார் 8000 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இல்லையேல் கிராம அலுவலர்களே அதற்கான பொறுப்பாளிகள் ஆவர் என மிக்சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பீபெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற (வெள்ளிக்கிழமை) அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு...
தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்துக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வைக் கொண்டு வர அவர்கள் முன்வரத் தவறினால் தமக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானித்து அதை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள். இவ்வாறு...
டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனிக்கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது. சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக...
Loading posts...
All posts loaded
No more posts
