மத்திய அரசின் உள்ளீடுகள் குறைவாக உள்ள சுயாட்சி முறை வேண்டும்

புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌவ்ரிஸ்ஸிடம் (James Duaris ) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று...

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக 30 ஆண்டுகளுக்கு பின் தமிழரொருவர் நியமனம்!

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பதவியை நாளை காலை பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் குற்றச் செயல்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திற்கு தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக் கப்பட்டுள்ளார். இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம்...
Ad Widget

இளைஞர்களை அரசியல்வாதிகள் அடிதடிக்கு பயன்படுத்துகின்றனர்!

யாழில் உள்ள இளைஞர்களை அரசியல்வாதிகள் சிலர் அடிதடியில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க பெற்றோர்களால் கவனிப்பின்றி வளர்க்கப்படும் பல இளைஞர்களை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு ஜே/123 கிராம சேவையாளர் பிரிவில் நேற்றைய தினம் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...

நல்லூர் பிரதேச சபையால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற பெருந்தொகையான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால்...

சம்பந்தன் , மைத்திரி இடையில் இடம்பெற்ற சுவாரஸ்ய கலந்துரையாடல்

ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்த தே. இதனை ஜனாதிபதியே திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் அதை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்துள்ளார். நிகழ்வின் போது சம்பந்தனின் தோளில் கையை போட்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதைத்துக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கீழ் அறைக்கு செல்லவில்லையா என ஜனாதிபதியிடம்...

கத்தியுடன் அலையும் நபரால் பெரும் பரபரப்பு: கண்டும் காணாதது போல் பொலிஸார்

சுன்னாகம் நகரப் பகுதியில் நகைக் கடையொன்றின் உரிமையாளராகவுள்ள குடும்பஸ்தரொருவர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அதனையண்டியுள்ள பல்வேறு தரப்பினரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சுன்னாகம் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்று அங்கு பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் மாணவிகளுடனும், பெண்களுடனும் சேஷ்டை விடும் குறித்த நபர் சுன்னாகம் பொதுச் சந்தைக்குள்...

காலநிலை தொடர்பாக மீண்டுமொரு எச்சரிக்கை!!

நாட்டை சுற்றி கடற்பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.விசேடமாக புத்தளம் , மன்னார் , காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் .தீவை சுற்றி மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை...

யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு அரியதோர் வாய்ப்பு

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஓர் அரச நியமனம் பெறவும் அரச சேவையிலிருந்து கொண்டே ஓர் பட்டதாரியாக வருவதற்கும் அரிதோர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எமது பிரதேச மாணவர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எமது பிரதேசத்திலேயே மனங்கவர் கொடுப்பனவுடைய அரச தொழில் பெற சந்தர்ப்பம்...

பேரீத்தம் பழம் வழங்கலில் குழறுபடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட பேரீத்தம் பழம் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லை என யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் அங்கம் வகிக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொகைதீன்...

இராணுவத்திற்கு பயந்து சட்ட முரணான செயலில் ஈடுபடாதீர்கள்: முதலமைச்சர்

எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதலமைச்சர்...

ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது பாதைகள் திறக்கப்படுமா ?

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...

யாழ். குடாக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை

யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23...

பாராளுமன்றம் வருவதற்கு கல்வித் தகைமை கொண்டுவரப்படவேண்டும்

பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...

சுகாதார ஊழியர் வெற்றிடம் முகாமைத்துவ சேவை திணைக்களம் காரணம்

வடமாகாணத்தில் தற்காலிகமாக பணியாற்றும் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே வடமாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு...

உலகிலே அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில்!

தற்கொலை செய்துகொள்வோர் குறித்து உலக நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சத்திற்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதன் வீதம் ஒரு இலட்சம்பேருக்கு 28.8 வீதமானவர்கள்...

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்வதையே சுமந்திரனும் விரும்புகின்றார்!

வடக்கில் விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக வடக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணமேயுள்ளன. சில கட்டுக்கடங்காத நிலமை ஏற்படும்போது விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவதில் தவறில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்கில் பணியில் விசேட அதிரடிப்படையினரை பணிக்கமர்த்துமாறு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...

உள்ளக கணக்காய்வு பிரிவை தவிர்ந்து எஞ்சியவர்கள் சோம்பறிகள்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுடன் சேர்த்து சில பிரிவுகள் மாத்திரமே வினைத்திறனுடன் செயற்படுவதாகவும் மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் சமய கலாசாரப் பிரிவு என்பன படுமோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்தின் வினைத்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்யும், செயற்றிறன் முகாமைத்துவ விளக்கப்படத்தின் மூலம் அறியமுடிகிறது. ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை,...

வெளிநாடுகளில் இறந்த நபர்களின் நெருங்கிய உறவினர்களைத் தேடுதல்!

லெபனான், தாய்லாந்து, சவூதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு பின்வரும் பணிக்கமர்த்தப்பட்டுள்ள நபர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என அறிவித்துள்ளன. 1) திருமதி. களுவாகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 3662097) அல்லது டிங்கிரியலாகே அசிலின் - லெபனான் 2) திருமதி. ஹேவா தொண்டில்லேகே அசிலின் (கடவுச்சீட்டு...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி-மஹிந்த, த.தே.கூ வாக்களிக்கவில்லை

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. குறித்த, பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தப் பிரேரணை மீதான...

வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிற்கு விளக்க மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts