- Thursday
- March 5th, 2026
11 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் (வயது 64 வயது) ஒருவர், வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் தலைமையகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 02. பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவு -...
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, 24 மணித்தியாலங்களும் இயங்கும் விஷேட சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பூநகரி கமக்கார அமைப்பின் தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட ஞானிமடம், நல்லூர், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி,...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அங்கிருக்கும் பல பகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல நாட்களாக கடும் வெப்பத்தினால் வாடிய மக்கள் தற்போது பெய்துவரும் கடும்மழையினால், தமது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் கடும் மழையுடன் கூடிய சுழல்காற்று...
நாட்டின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தாழமுக்க நிலை தற்போது நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மழை வீழ்ச்சி குறைவடைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் காற்று தொடர்ந்து அதிகரித்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேகாலை – தெஹியோவிட்ட - ஹல்தொட்டை – டெனிஸ்தோட்டம் பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில்...
இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த 45 கிலோ தங்கத்தை கடற்படையினர் சுங்கப்பிரிவினரிடம் கையளித்த பின்னர் 12 மணித்தியாலத்திற்குள் அதில் 8 கிலோ தங்கத்தினை மீள எடுத்துச் சென்றதாக...
விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில் ,...
பிரபாகரனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் செயலையே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கொள்கின்றார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் வடக்கில் பழைய நிலைமைகளும் அதே சிந்தனையுமே மக்கள் மத்தியில் உள்ளது. அவர்களின் மனங்களில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி எம்முடன் இணைத்துக்கொள்ள நாம் பல...
சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி...
புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...
கச்சதீவில் புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியான செய்தியில் உண்மையில்லையென சிறீலங்காக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் கச்சதீவு தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சண்டே ரைம்ஸ் நாளிதழுக்கு செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பில் கடந்த...
ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...
வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம்...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க வட மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருந்தும் இங்கு வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றால், ஏதோ ஓர் இடத்தில் பிரச்சினை...
சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு, அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் பொருட்டு விஷேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் - 011 2 434 251...
முள்ளிவாய்க்கள் இனப்படுகொலை வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தெய்வேந்திர முனையில் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதான சுடரினை மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஏனைய சுடர்களை முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மதனி, தீபன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், பருத்துறை பிரதேச சபை...
அடுத்த வருடம் தொடக்கம் ஒன்லைன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தபால் மூலம் விண்ணப்பிப்பதனால் ஏற்படும் நேர தாமதத்தை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அறிவகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலையங்களினூடாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும்...
கிளிநொச்சி - தர்மபுரம் - புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிறந்த போது குழந்தை இறந்திருந்தமையால் அதனை நீரோடையில் வீசியதாக, குறித்த பெண், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
