- Thursday
- March 5th, 2026
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...
சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
கிளிநொச்சியில் 70 வருடங்களின் பின் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மன்னார் பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றினால் பேசாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து சுமார் 40 வரையான மீன்பிடிப்படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்?அரசியல் தொடர்புகள் உண்டா? நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி! யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்பில் காவலத்துறையினர் அண்மையில் 'ரொக் டீம்' என்றொரு குழுவினரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவரும் நிலையில், அக் குழு தொடரப்பாகவும், யாழ் குடா...
தமிழர் பிரதேசங்களில் எங்குமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கின்றனர். மீண்டுமொரு ஆயுதக்குழுக்களின் செயற்பாட்டை யாழில் கொண்டு வருவதற்காகவா இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு அவர்கள் துணைபோகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால், ஜே - 80 கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் போது நீர் பாய்ந்து செல்லக்கூடிய மதகு மற்றும் கால்வாய் என்பவற்றை மூடி யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளமையால், தங்கள் கிராமத்தில் தேங்கிய வெள்ளம் பாய்ந்தோட முடியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்....
வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....
மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது...
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 'இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்' என சஜீத் பிரேமதாஸ...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு...
முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...
நிதி அமைச்சின் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி வாக்கெடுப்பின்போது குளறுபடி இடம்பெற்றது என எதிரணியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் நால்வரடங்கிய குழுவை சபாநாயகர் அமைத்தார். இந்நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது இதையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டம்...
"போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே...
யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு...
வட மாகாண சபையையும், வட மாகாண முதலமைச்சரையும், அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள இணைப்பாட்சி முறையையும் விமர்சித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழில்...
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் தொடக்கம் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதனால் மக்கள் வாழ்விடங்கள் பலவற்றுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, சிவபுரம், பெரியபரந்தன், பொன்நகர், உருத்திரபுரம், அக்கராயன், ஆனைவிழுந்தான், மருதநகர், உமையாள்புரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம் பொக்கணை, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, நாவற்கொட்டியான்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel...
யாழ்ப்பாணம் கரவெட்டியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி வீசியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணியளவில் அல்வாய்ப் பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்த அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வு மே – 18ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றலில் காலை 10.00 மணிக்கு இடம்பெறும் எனவும் பல்கலைக்கழக ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுத்த விதிகளை மீறி தனி...
Loading posts...
All posts loaded
No more posts
