தமிழகத்தின் நாகை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையை சேர்ந்தவர்கள் வந்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது.
இதனையடுத்து, அப் படகில் இருந்தவர்கள் அக்கரைபேட்டையே சேர்ந்த குமார் என்பவரது விசைபடகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.