ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர்கள் யாழ் மாவட்டத்திற்கு தீடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் நேற்று காலை யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டதை தொடர்ந்து அதற்கு முன்பாக உள்ள நவீன மயமாக்கப்பட்டுள்ள யாழ் தலைமை பொஸிஸ் நிலைய கட்டிடத் தொகுதியினையும் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து பொஸிஸ், இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலனிக் குழுவினர் சந்திப்பு மேறகொண்டனர். இச்சந்திப்பு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கு கலையரங்கில் நடைபெற்றது.
இதில் யாழ் மாவட்ட பிரதிப் பொஸிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, சிரேஸ்ட பொஸிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் மாவட்ட அபிவிருத்தி செயலனிக் குழுவின் அமைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.