Ad Widget

வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிற்கு விளக்க மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.

கடந்த மாதம் 4ம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அறிவுறுத்தி இருந்தார். அதன் பிரகாராம் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபப்ட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மே மாதம் 18ம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மற்றுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிசார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை கடந்த 2ம் திகதி ஊர்காவற்துறை பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் முற்படுத்திய போது அவர்களை 8ம் திகதி (நேற்றய தினம்) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.

அதன் பிரகாரம் நேற்றய தினம் புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போதே நீதவான் அவர்களை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

Related Posts