- Saturday
- May 9th, 2026
நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்களின் நிர்வாக முடக்க முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணக் காவல்துறை அதிகாரிக்கும் ஊழியர்களுக்குமிடையில் இடம்பெற்ற...
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அகிலேஸ்வரன் அகிலா (வயது14) என்றச் சிறுமியின் சடலம், திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த சிறுமி, சுகவீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற போது, கடந்த மார்ச் மாதம் 27...
யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையுடன் பேசி இது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லூர் ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை...
யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (14.11.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விதை உருளைக்கிழங்குகளை வழங்கி உருளைக்கிழங்கு விநியோகத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து...
நாளை தொடக்கம் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ,மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய மின்னல் தாக்குதல் மற்றும் காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரில் காணப்படும் பாரிய குப்பைக்கூழங்கள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும்...
மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மையில் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகித்த வார்த்தைகள் மற்றும் அவரது செயற்பாடுகள் என்பன, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச நிலையை எடுத்துக்காட்டி நிற்கின்றதென குறிப்பிட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை...
இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள...
நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபட்டுவந்த யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்கள் இன்று முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாநகர சபையின் நுழைவாயிலை மறித்து அவர்கள் இன்றைய தினம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு...
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பிரதேத்தில் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இறந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்துள்ளவர் மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மல்லாவிப் பகுதியில் தனது வயலில் வேலைசெய்துகொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (62) என்ற விவசாயியே பலியாகியுள்ளார். இவரது சடலம்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முடிந்தால் தாய்ப்பாலுக்கும் அபராதம் அல்லது வரி விதிப்பார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் வரிச்சுமைய மக்கள் மீது சுமத்தியுள்ளதாக...
திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து, தன்னுடைய மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்துள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நிர்வாணக்கோலத்தில் மயக்கமடைந்திருந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அக்குடும்பத்தின்...
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தொழில் யாப்பில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று...
2878 இளைஞர் யுவதிகள் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக அடுத்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே இதுதொடர்பாக தகவல் தருகையில் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாக தெரிவத்தார். இவ்வருடத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் 1595...
பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர் சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர். மட்டுவில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களையும் இன்று(திங்கட்கிழமை) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் ஆவா குழு என அழைக்கப்படும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே...
உடுவில் டச்சுறோட் பகுதியில் உள்ள வீட்டுக்குள் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை அடித்து, துன்புறுத்தி நகைகளை நேற்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிகாலை வீட்டு முன்கதவினை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் படுத்திருந்த பெண் மீது முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தலையணையால் முகத்தினை அழுத்தி...
கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு சுபாஸ்கரன் வயது(38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். உறவினர் ஒருவரின் அந்தியெட்டி கிரியைகள் செய்வற்காக சென்ற மேற்படி நபர், கேணியில் நீராடச்சென்றிருந்தார். குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்தவர்கள் அவரை...
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...
Loading posts...
All posts loaded
No more posts
