Ad Widget

வடமாராட்சி கடற்பகுதியில் காணமல் போன மீனவர்கள் திரும்பி வந்தனர்

வடமாராட்சி கடற்பகுதியில் நேற்று முன்தினம் (புதன் கிழமை) இரவு ஐந்து படகுகளில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களும் நேற்று (வியாழக்கிழமை) கரை திரும்பி உள்ளனர்.

நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும் , வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் , இன்பர்சிட்டி பகுதியில் ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை மாலை கரை திரும்பி உள்ளதாக அறியமுடிகின்றது.

Related Posts