வடமாராட்சி கடற்பகுதியில் நேற்று முன்தினம் (புதன் கிழமை) இரவு ஐந்து படகுகளில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களும் நேற்று (வியாழக்கிழமை) கரை திரும்பி உள்ளனர்.
நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும் , வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் , இன்பர்சிட்டி பகுதியில் ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை மாலை கரை திரும்பி உள்ளதாக அறியமுடிகின்றது.