- Saturday
- May 9th, 2026
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று புதன்கிழமை காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள். யாழ்.மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள். இந்நிலையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய...
இலங்கையின் மிக மோசமான சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர் எனக் குறிப்பிடப்படும் குற்றப்புலனாய்வுப் பிரவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ், ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. அமர்வில் கலந்துகொண்டுள்ளமை பாரிய எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததோடு, கொழும்பிலுள்ள நான்காம் மாடி சித்திரவதைகளுக்கும் அவரே பொறுப்பாக இருந்ததாகவும்...
“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். மருந்தக ஊழியர்களை, துணை சுகாதார சேவைக்குள் ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, துணை மருத்துவ சேவை ஒன்றிணைந்த முன்னணியின் ஊடகச் செயலாளர் நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்....
காலை முதல் எங்களுக்கு தண்ணீர் கூட வழங்க வில்லை என வித்தியாவின் கொலை வழக்கின் 8 ஆவது சந்தேக நபர் குற்றம் சாட்டியுள்ளார். 12 சந்தேக நபர்களின் வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவல்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படது. இதன் போதே குறித்த 8ஆவது சந்தேக நபர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தங்களை வவுனியா சிறைச்சாலையில் இருந்து...
இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்தியாவை நோக்கி ஆயுதங்களுடன் சென்ற இருவர் மீது, ராமேஷ்வரம் பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் படகில் இருந்த இருவர், பதிலுக்கு கடலோர காவல்படையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்வதாக இலங்கை கடற்படையினர் வழங்கிய...
குருநாகலில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் - ரத்தரவூவ இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது,...
சுகாதாரத் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கலகம் தடுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகர சுகாதார ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் யாழ். நகரமெங்கும் குப்பைகளால் நிறைந்திருந்தது. இன்நிலையில் இன்று, யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகமானது தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றுவதற்கு...
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில், புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடம் பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைக்கு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது கடந்த...
திருட்டு மண் ஏற்றி வந்த கன்டர் வாகனம் மோதி, அதிபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி, பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து, முள்ளி சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது. லேனாஸ்குமார் (வயது 39) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய...
யாழ். மாவட்டத்தில் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானிய விலையில் சீமெந்து பக்கெட் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளைத் திருத்துவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானியமாக வழங்கப்பட்டு வரும் சீமெந்துப் பக்கெட் விநியோகம் இந்த வருடத்தில் 3 ஆம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனால்...
ஆவா குழுவின் பிரதான தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 8 தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வட மாகாணத்தில் இயங்கும் ஆவா இராணுவத்தினரால் வழிநடத்தப்படுவதில்லை என்றும் அமைச்சர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றயதினம் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டனர். இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 28ம்திகதி வரை நீடிப்பதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம். றியால் உத்தரவிட்டார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்தேக...
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரியர் எட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மற்றும் வடமாகாணத்தின் முன்னாள்...
நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்கள் ஒன்பது நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நேற்றய தினம் காலை 8 மணியளவில் மாநகர சபைக்குள் நுழையும் சகல வீதிகளையும் மூடி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது....
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக...
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்...
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனைத் தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குள் அத்துமீறி...
Loading posts...
All posts loaded
No more posts
