Ad Widget

ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வைத்திருந்த 3 கிராம் 146 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயினை கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்.

Related Posts