Ad Widget

சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களின் ஆணையை மீறுகிறது

தமிழ் மக்களின் உரிமையான இறைமையை கோரவில்லை என சுமந்திரனின் கருத்து தமிழ் மக்களின் ஆணையை மீறும் செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசியல் 1951ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ் தேசத்திற்கென தனித்துவமான இறைமை உண்டு. அந்த இறைமை எங்களிடம் மட்டுமே இருக்கின்றது. அதனை வேறு எவரிடமும் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சின் விவாதத்தில் கலந்துகொள்வதென்பதும், அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பதும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பதும் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் முக்கியமானவை.

தமிழ் மக்கள் தமது இறைமையைக் கோரவில்லை என்றும் இறைமையை பகிர வேண்டுமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணித்தரமாக கேட்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தமிழ் தேசியகூட்டமைப்பு தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது.

ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்கள் பாவிக்கக்கூடாது. தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதென்றும் கூறியிருக்கின்றார்.

சுமந்திரன் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினாலும், நடைமுறையில் இறைமையை பகிர்ந்தளிக்கச் சொல்லிக் கேட்கவில்லை என்று சொல்வதன் மூலம் சட்டரீதியாக மிகவும் தெளிவான வாக்குறுதியை அரசாங்கத்திற்கும், இலங்கைப் நாடாளுமன்றத்திற்கும் கொடுக்கின்றார்.

எங்கு எமது உரிமைகளைக் கோர வேண்டுமோ அங்கு, தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் ஆணையை மீறுகின்ற வகையில் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தல் காலத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள், தேர்தல் நிறைவடைந்த பின்னர் மீறும் செயற்பாட்டில் இருக்கின்றார்கள். வடகிழக்கில் பேசும் போதே இறைமையைப் பற்றி பேசுகின்றார்கள். பேச வேண்டிய இடத்தில் அனைத்துக் கொள்கைகளையும் கைவிட்டு பேசுகின்றார்கள் என்பதனை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் எமது எதிர்கால சந்ததியினருக்கு துரோகமழிக்க வேண்டாம் என்றும் தமிழ் மக்களின் உரிய நடைமுறைகளை கையாள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts