Ad Widget

வீட்டை உடைத்துக் கொள்ளை

பருத்தித்துறை தண்ணீர்குளத்தடி பகுதியில் நேற்றுப் புதன்கிழமை (30) மதியம், வீடு ஒன்றை உடைத்து 3 பவுண் நகை, 3,000 ரூபாய் பணம் என்பன திருட்டுப் போயுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்ற நேரம் பார்த்து முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் இருந்த நகை, பணம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts