பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பொறுப்பற்ற முறையில் காலங்கடத்தி வருகின்றமையால் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் அவர்கூட சரியான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற முறையில்...

யாழ் மக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் சமர்ப்பிக்க முடியும்

யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...
Ad Widget

மீள்குடியேற்ற பணிகளுக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு! அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் 4464 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இதே வேளை இக்காலப்பகுதியில் 2473 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 171 உட்பாதைகளும், 29 பாடசாலைகளும் 23 வைத்தியசாலைகளும் 41...

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில்...

ஈழத் தமிழ் மக்களிற்கு நீதியும் உரிமையும் கிடைக்க ஒலித்த குரல் ஓய்ந்தது

தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவுச் செய்தி பாரத தேசத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கும் பேரதிர்ச்சியையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய உபகண்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் பாரத தேசத்தில் சுமார் ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலத்தின் ஈடு இணையற்ற தலைவியாக விளங்கிய மாண்புமிகு...

செல்வம் அடைக்கலநாதன் அவர்களது தந்தையாரின் மறைவு : சம்பந்தனின் இரங்கல் செய்தி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுள் ஒருவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைப் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களது தந்தையாரின் மறைவையொட்டி, எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ இரா.சம்பந்தன் அவர்களால் விடுக்கப்படும் இரங்கல்...

தமிழ் மக்கள் பேரவையின் இரங்கல் செய்தி

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரில் ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழ் மக்கள் பேரவை தனது இரங்கல்களை தெரிவிக்கின்றதோடு உங்களின் துயரையும் பகிர்ந்து கொள்கினறோம். அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் சார்பில் ஆற்றிய காத்திரமான பங்களிப்புகள்...

ஜெயலலிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது; சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ் நாட்டில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் இழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரங்கல் வெளியிட்டுள்ளார். வால்வெள்ளி ஒன்று அரசியல் வாழ்வில் வானில் பளிச்சென்று பிரகாசமாக தோன்றி, திடீரென மறைந்துவிட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று அவைத்...

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை!

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசவையின் 67ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றபோது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார். வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தவராசாவை நீக்கவேண்டுமென ஈழ மக்கள்...

தமிழக முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு கடையடைப்பு!

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் 2.00 மூடுமாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அல்லலுறும்போதெல்லாம், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால்...

ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு எதிரான வழக்கில் சாட்சியளிப்பதற்கே இவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு மேலதிகமாக முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் 13 பேருக்கு...

பசிலுக்கு எதிரான திவிநெகும குற்றச்சாட்டுக்கள் வாபஸ்

திவிநெகும முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார். முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். ஆகவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப்...

ஜெயலலிதாவின் மறைவு இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பு : சம்பந்தன்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெராமின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கை தமிழ் மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது “இலங்கை தமிழ் பேசும் மக்களின் பிச்சினைகள் தொடர்பில் அவர் விசேட கவனம் செலுத்தினார். இது தமிழ்நாடு சட்டமன்றத்தில்...

கச்சதீவு புதிய அந்தோனியார் தேவாலய திறப்பு விழா ஒத்திவைப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி நாளை நடைபெறவிருந்த கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பங்குதந்தை வணக்கத்திற்குரிய அன்டனி ஜெயரஞ்சன் அறிவித்துள்ளார். நாளைய தினம் நடைபெறவிருந்த திறப்பு விழாவில்...

ஜெயலலிதாவிற்கு வடமாகாண சபையில் அஞ்சலி

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார். வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இன்றைய சபையமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி...

சாரதிகளுக்கான தண்டனை, அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கை

வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதம் குறித்து புதிய சுற்றறிக்கையை வௌியிட, எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வாகன சாரதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அபராதத்...

O/L பரீட்சை நாளை, சட்ட மீறல்களுக்கு கடுமையான தண்டனை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதாகவும், வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காகவேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில்...

மின்சார வசதியைப் பெற்றுத்தருமாறு கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2009 ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். எனினும் இவ்வாறு அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்கள், அவர்களது சொற்த இடங்களில் குடியமர்த்தப்படாது...

கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

அனுராதபுரம் கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும், தாக்குதல் நடாத்தப்பட்டபோது குறித்த விகாரையில் எவருமே இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலாளிகள் விகாரைக்குள் சென்றும் அங்கிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்துள்ளதாக கொக்கிராவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts