Ad Widget

பொலிஸ் மா அதிபர் தடை விதிக்கவில்லை: பொலிஸ் ஊடகம்

தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ் மா அதிபரிடமிருந்து தமக்கு அவ்வாறானதொரு உத்தரவு கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயிரும் தினமும் ஊடகங்களுக்கு வரும் பொலிஸ் செய்திகள் அடங்கிய மின்னஞ்சல் இறுதியாகக் கடந்த 20 திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts