Ad Widget

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் காயம்

யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.



பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரமே இவ்வாறு விழுந்துள்ளது.

184 மீற்றர் உயரமான இந்த தொலைத் தொடர்புக் கோபுரத்தைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது மீதமாக இருந்த கோபுரத்தின் பகுதி அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது. இதன்போது வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் கோபுரத்தின் கம்பி தாக்கியதில் காயமடைந்துள்ளார்.

Related Posts