Ad Widget

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா என அழைக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிக்கியா என்றழைக்கப்படும் யோகேஸ்வரன் என்பவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்.

இவர் ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் சிறைக்காலம் முடிந்து வெளியில் வந்த இவர், மீண்டும் திருட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இவர் மேல் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய கடந்த மூன்று மாத காலமாக தேடப்பட்டு வந்திருந்த இவர், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை கைது செய்யும் போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம், நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts