கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு (26) பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் ரயிலில் குண்டு இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, ரயில் இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
ரயிலில் குண்டுப் பொதியொன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன், இரவு 8.00 மணிக்கு ரயிலில் இருந்த சகல பயணிகளும் இறக்கப்பட்டு, விசேட அதிரடிப்படைப் பிரிவின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இருப்பினும், எந்தவித சந்தேகத்திற்கிடமான பார்சல்களும் காணப்படாமையினால், மீண்டும் 10.25 மணிக்கு ரயில் பதுளை நோக்கி பயணிக்க ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.