- Sunday
- May 10th, 2026
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார். 'இவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ் மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு...
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேரரை,...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட...
நேற்று முன்தினம் இரவு தமது வழமையான ரோந்து பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த சிறுவனே கஞ்சாவை நுகர்விற்காக வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்ப ட்டார். கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபரை...
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா, நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைப்பட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா...
2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பா தகவல் தெரிவித்த மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் புதிய வாக்காளர் இடாப்புபில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சமாகும். 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடி 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 ஆகும். வருடாந்த...
விடுமுறைக் காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 91 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்த விடுமுறைக் காலப்பகுதியில் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவகின்றன...
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், ஈழத்தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் கடந்த 01.12.2016 அன்று இயற்கை எய்தினார். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரையிலும் ஒரு கவிதைப் போராளியாகவும், களப்போராளியாகவும் பணியாற்றி வந்த அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 12.12.2016 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3.00...
யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார்...
இவ்வாண்டில் மாத்திரம் டெங்கு நோயால் 47900 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு டெங்கு நோயை கட்டுப்படுத்த முப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , யாழ்ப்பாணம் , இரத்தினபுரி , குருநாகல் , புத்தளம் , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு...
வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மலையாள பூஜை நேற்று (சனிக்கிழமை ) வவுனியா இறம்பைக்குளம் சிறீ கருமாரி நாகபூசனி அம்மன் கோவில் மண்டபத்தில் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி சிவகாம கலாநிதி சிறீ ஐப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் மலையாள பூஜையும் பஜனையும் நடைபெற்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் என்ற 26 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம்...
நாய் கடிக்கு உள்ளான பெண், ஒரு மாதத்துக்குப் பின்னர், சிகிச்சை பலனின்றி யாழ். போனா வைத்தியசாலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாய் பகுதியினை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான தர்மபாலன் ரதிமலர் வயது(55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தப் பெண், தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்ற போது தெருவில் நின்ற நாய் கடித்து...
மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரியிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் இரண்டு மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
வட மாகாணத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் அம் மாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
நாங்கள் எங்கள் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டினால் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் சிலர் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஆத்திரமூட்டுவதாக எமது கருத்துக்கள் அமைவதாகவும் கூறுகின்றார்கள் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். தவறான செய்திகளை உள்வாங்கி அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தபடி கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக அமைச்சர்...
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் காளான் வளர்ப்பு தொடர்பான கருத்தமர்வு கடந்த சனிக்கிழமை (10.12.2016) நடைபெற்றுள்ளது. காளான் வளர்ப்பில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் அமைந்த இக்கருத்தமர்வு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில், கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காளான் செய்கையாளர்கள்...
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் எல்லையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளின் உண்மையான விபரங்கள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாமையால், தான் அறிக்கையொன்றைத்...
கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம்...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் சிற்றூர்தி சாரதிக்கும் மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் தனியார் சிற்றூர்தி சாரதியான ரவீந்திரன் ரெனோல்ட் எனும் நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டார் என போக்குவரத்து சபை பேரூந்து சாரதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாலி வீதி...
Loading posts...
All posts loaded
No more posts
