Ad Widget

ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தைஅழமாக ஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து சிதறி,வெளிநாடுகளின் வாழும் ஈழத் தமிழர்களை, இச் சொற்பதம் கொண்டு அழைக்கலாம்.

பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொது செயலாளர் என்ற முறையில், 1990ம் ஆண்டு முதல் ஜெனிவாவை மையமாக கொண்டுஇயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயற்பாடுகளிலும், பிராசில்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், பாரளுமன்றம் ஆகியவற்றுடன் வேலை திட்டங்களைமுன்னெடுத்தவன் என்ற முறையிலும், ‘ஐ.நா.வின் செயல் முறைகளில் ஈழத் தமிழர்களது செயற்பாடுகள’பற்றிய ஓர் ஆய்வை, யதார்த்தின் அடிப்படையில் முன் வைக்கவிரும்புகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபை பற்றிய சிறந்த அறிவை கொண்ட ஒருவர், ஜெனிவாவில் – மனித உரிமை, அகதிகள் விவகாரம், மனிதபிமான செயற்பாடுகளையே அடிப்படையகொண்டுள்ளவை என்பதையும், அதேவேளை, நியூயோர்க்கில் அரசியல் செயற்பாடுகளை மையமாக கொண்டு செயற்படுகின்றனா என்பதையும், மிக இலகுவில் புரிந்துகொள்வார்கள். இவற்றை வேறுவிதமாக கூறுவதனால், அரசியல் செயற்பாடுகளின் முடிவுகளை கையாளும் ஐ.நா. பொது சபையும், ஐ.நா. பாதுகாப்பு சபையும்நியூயோர்க்கிலேயே நிலை கொண்டுள்ளன.

இவ் அடிப்படையில் ஜெனிவாவில் உள்ள செயற்பாடுகள் பற்றி முதலில் எடுத்துரைக்க விரும்புகிறேன். ஈழத் தமிழர்களாகிய எமது வேலை திட்டங்களை, மனித உரிமையுடனானமனிதபிமான செயற்பாடுகளெனவும், அரசியல் செயற்பாடுகளெனவும் இரு பகுதிகளாக பிரிக்கலாம். இவற்றை நவீன சொற்பதங்களுக்கு அமைய, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என கூற முடியும். துர்அதிஸ்டவசமாக, உணர்ச்சிவச செயற்பாட்டளர்கள் இவற்றை புரிந்து கொள்ள தவறுகின்றனர். நிட்சயமாக, பொறுப்புக் கூறல் மூலமாகநல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், நாம் வண்டியின் முன்னால் மாட்டை கட்டப் போகிறோமா? அல்லது மாட்டின் முன்னால் வண்டியைகட்டுவது நல்லாத என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஜெனிவாவிற்கு செல்வது சுலபமான காரியம் ஆகையால், தமிழர்களது சுயநிர்ணய உரிமையில் அக்கறை கொண்டுள்ள தமிழ் அரசியல் வாதிகள், ஜெனிவாவில் தமது நேரகாலத்தை வீண் விரயம் செய்வது, மாட்டின் முன்னால் வண்டியை கட்டுவதற்கு சமனானது.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமை செயற்பாடுகளின் உண்மை நிலையை நாம் ஆராய்வோமானால், முன்னைய ஐ.நா. மனித உரிமை ஆணை குழுவில, சுயநிர்ணய உரிமைக்குஇருந்த நிகழ்ச்சி நிரல், தற்போதைய ஐ.நா. மனித உரிமை சபையில் அறவே கிடையாது. இதனால் சிலர், ஐ.நா. மனித உரிமை சபையில், ‘வளர்ச்சி உரிமை’ (Right to development)என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் தமது சுயநிர்ணய உரிமை பற்றி உரையாற்றுகின்றார்கள். இவ் உண்மையை அறியாத பலர், தமது பக்க கூட்டங்களை ஒழுங்கு செய்து ‘சுயநிர்ணயஉரிமை’ பற்றி அலட்டி கொள்வது, வீண் விரயம் என்பதே உண்மை. இங்கு தான் சிறிலங்கா அரச முகவர்களின் கபடத்தன்மைகள் வெளியாகின்றது. காரணம், பிரயோசனம் அற்றஓர் செயற்பாடு ஒன்றில், உணர்ச்சிவச செயற்பாட்டாளர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் காலம் கழிக்க வழி வகுத்துள்ளனர்.

மனித உரிமை

ஜெனிவாவில், நடைமுறையில் உள்ள பல மனித உரிமை செயற்பாடுகளை, ஈழத் தமிழர்கள் ஆகிய எம்மால், சரியான முறையில் பாவிப்பதன் மூலம், நிட்சயம் பொறுப்புக்கூறலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி காண முடியும்.

மனித உரிமை செயற்பாடுகள் என்பது ஜெனிவாவில், இரு தளங்களில் நடைபெறுகின்றன.

ஓன்று, முன்னைய ஐ.நா. மனித உரிமை ஆணை குழுவிற்கு சமானக தற்பொழுது நாற்பத்தி ஏழு (47) நாடுகளின் அங்கத்துவத்தை கொண்ட ஐ.நா. மனித உரிமை சபை. அடுத்தபடியாக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயம். இவை இரண்டினதும் செயற்பாடுகளும் எலும்பும் சதை போன்றது அல்லா. இவை இரண்டும் நல்ல உறவுகளைகொண்டவர்கள் போன்று கட்சியளித்த போதும், ஐ.நா. மனித உரிமை சபை என்பது, அரசில் கலப்பு கொண்டது என்பதே உண்மை.

ஐ.நா. மனித உரிமை சபை என்பது, அரசில் கலப்பு கொண்டதாக இருந்த பொழுதும், மனித உரிமையை மதிக்கும் நாடுகள், மனித உரிமையை மீறும் நாடுகள் மீது தமதுஅளுந்தங்களை பிரயோகிப்பதற்கு, அவ் நாடுகள் பற்றிய, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளை பின்பற்றி முடிவு எடுக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயம்

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயம், ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மீது, உடன்படிக்கை குழுக்கள் மற்றும் விசேட பிரதிகளான மனித உரிமை நிபுணர்களின் (Treaty bodies and Special Procedures) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிற்கும் உறுதுணையாகவுள்ளனர். இவ்விரு பிரிவினரும், மனித உரிமை சபையிற்கு, மனித உரிமைபிரகடனங்களை நாடுகள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துரைகின்றனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயத்தில், இவ் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கென நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை, மேற்குறிப்பிட்ட இருபிரிவினர்களுடைய செயற்திட்டங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதுடன், வேறு பிராந்தியங்களில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயங்களின்செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்கின்றனர். ஐ.நா. மனித உரிமை சபையினால் நாடுகள் மீது தவணை முறையில் மேற்கொள்ளப்படும் ‘பூளோக மீளாய்வையும்’ (Universal Periodic Review – UPR) பரீசீலிப்பதற்கும் உறு துணையாகவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை சபை

ஐ.நா. மனித உரிமை சபை, ஐ.நா.சாசனத்தின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை காப்பதற்கான அங்கீகாரத்தை கொண்டுள்ளது. இவ் சபையில் -ஐ.நா.அங்கத்துவ நாடுகள், பார்வையாளர் நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன்,ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமை சபை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை ஆணை குழு இவ் செயற்திட்டங்களை மேற்;கொண்டிருந்த வேளையில்,அதனது உதவி அமைப்பாக, செயற்பட்ட ஐ.நா.மனித உரிமை உப-ஆணைக்குழுவை, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்> ஆலோசனை குழு என்ற பெயர் கொண்ட அமைப்பு,ஐ.நா. மனித உரிமை சபைக்கு உதவியாக ஆலோசனைகளை வழங்குகிறது.

பூளோக மீளாய்வை (Universal Periodic Review – UPR)

ஐ.நா.அங்கத்துவ நாடுகள் மனித உரிமை அடிப்படை உரிமைகளையும், சர்வதேச மனித உரிமை சாசனங்களையும் எவ்வளவு தூரம் மதித்து செயலாற்றுகிறார்கள் என்பதை,தவணை முறையில் பரீசீலிப்பதற்காக இவ் வழிமுறை நடைமுறையில் உள்ளது.

விசேட வழிவகைகள் (சீவில், சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல்)

இவ் வழிவகைகளை கண்கணிப்பதற்கென, நாற்பத்தி மூன்று (43) குழுக்கள் மற்றும் விசேட பிரதிகளான மனித உரிமை நிபுணர்கள் காணப்படும் அதேவேளை, பதினான்கு (14)பிரதிநிகள் சில நாட்டினை கண்கணிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், ஏதேச்சையாக தடுத்து வைத்தல்; பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போதல்; சட்டம் மற்றும் நடைமுறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுபோன்றவற்றை கண்காணிக்கும் குழுக்களும், மனித உரிமையின் விசேட பிரதிநிதிகளை கொண்ட – நீதிக்கு புறம்பான அல்லது ஏதேச்சையான கொலைகள், சித்திரைவதைகள்,பெண்கள் மீதான வன்முறைகள், பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம், மதச் சுதந்திரம், மனித உரிமை செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய விடயங்கள், சுதந்திரமானவழங்கறிஞர்களும் நீதிபதிகளும், சிறுபான்மையினர், இன துவேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சிறு பிள்ளைகளும் அவர்கள் மீதான வன்முறைகள், உணவு உரிமை, கல்விஉரிமை போன்ற பல பிரிவினர்களின் செயற்பாடுகள் ஈழத் தமிழர்களிற்கு பெரிதாக உதவ கூடியவை.

இவ் நாற்பத்தி மூன்று குழுக்கள் மற்றும் விசேட மனித உரிமை நிபுணர்களுடன், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் பல செயற் திட்டங்கள் முன்பு நடைமுறைபடுத்தியிருந்தது. இன்று சில குழுக்களுடனும், மனித உரிமை நிபுணர்களுடனும் சில செயற் திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறது. இவற்றுடனான எமது செயற்திட்டங்களின்பிரதிபலிப்புக்கள் யாவும் ஐ.நா. அறிக்கைகளில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் குழுக்களிற்கும், விசேட மனித உரிமை நிபுணர்களிற்கும், பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது உற்றார் உறவினர்களும், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவை தமதுமனுக்களை அனுப்பி வைக்க முடியும்.

உடன்படிக்கை குழுக்கள்

தற்பொழுது பத்து உடன்படிக்கை குழுக்கள் காணப்படுகின்றன.

ஆவையாவன – மனித உரிமைகள் குழு; பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய குழு; இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய குழுவிற்கு; பெண்களுக்கு எதிரானபாகுபாடு ஒழிப்பது பற்றிய குழு; சித்திரவதைக்கு எதிரான குழுஇ சித்திரவதையை தடுப்பதற்கான துணைக்குழு; குழந்தைகள் உரிமைகள் குறித்த குழு; குடிபெயர்ந்ததொழிலாளர்கள் குழு; ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் குழு; காணாமல் போனவர்கள் தொடர்பான குழு.

கடந்த காலங்களில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குழு; சித்திரவதையை தடுப்பதற்கான துணைக்குழு ஆகிய இரு குழுக்கள் தவிர்ந்த மற்றைய குழுக்களுடன் பிரான்ஸ் தமிழர்மனிதர் உரிமைகள் மையம் பல செயற் திட்டங்களை மேற்கொண்டிருந்தது.

ஆனால் 2009ம் ஆண்டு மே மாதம் முதல், இவ் குழுக்களிற்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எந்த ஒழுங்கான வேலை தகவல்களும் சமர்ப்பிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவற்றிற்கு பல காரணங்கள் இருந்த பொழுதும், பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமான ஒழுங்கான சரிபார்க்கப்பட்ட நேர்த்தியான எந்த தகவல்களும் எமக்கு கிடைக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, சிறிலங்கா அரசு சார்பான திட்டமிட்ட சதி வேலைகள் ஐ.நா.வில் மேற்கொள்ளப்படுவதும் ஓர் காரணியாகவுள்ளது.

இவ் உடன்படிக்கை குழுக்களிற்கும், விசேட மனித உரிமை நிபுணர்களிற்கும், பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது உற்றார் உறவினர்களும், அரச சார்பற்ற நிறுவனங்கள்போன்றவை தமது மனுக்களை அனுப்பி வைக்க முடியும்.

இவ்வேளையிலேயே, நல்லாட்சி என கூறப்படும் தற்போதைய பித்தலாட்டம் நிறைந்த சிறிலங்க அரசு, மறைந்த மாமனிதர் திரு யோசப் பரராஜசிங்கம், திரு ராவிராஜ் போன்றசிலரது படு கொலைகள் பற்றி அக்கறை கொண்டு விசாரணைகள் நடாத்தி வரும் அதேவேளை, மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர் திரு சிவராம் தாராகிபோன்ற பல ஊடகவியலாளாராது படுகொலைகளை எதற்காக அலட்சியம் செய்துள்ளனர் என்ற உண்மையை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ் படுகொலைகள்அலட்சியம் செய்யப்பட்டுள்ளமை பற்றி நாம் எமது பரப்புரைகளில் முன் வைக்க வேண்டும்.

முறைப்பாடு செய்யும் முறை

இவ் வழிமுறை மூலமும், மனித உரிமையை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது ஓர் ஐ.நா.மனித உரிமை சiயின் ரகசிய நடைமுறை.

இவ் ரகசிய வழிமுறைக்கு, பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது உற்றார் உறவினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டும் அல்லது ஓர் மனித உரிமை மீறல் பற்றிய நேடிஅனுபவத்தை கொண்டவர்களும் மனுக்களை அனுப்பி வைக்க முடியும்.

அரசியல்

தமிழீழ மக்களுடைய அரசியல் பிரச்சனை என்பது, இலங்கை தீவின் சுதந்திரத்திரத்திற்கு (1948) முன்னும் பின்னும் இன்று வரை தொடர்ந்து இருந்த வந்துள்ள பொழுதிலும்,பொதுச் சபையில் 1978ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 5ம் திகதி ஓர் உரையும் மற்றும் இந்தியா அரசினால் 1983ம், 1984ம் ஆண்டு சில உரைகள் தவிர்ந்த வேறு எந்த சந்தர்ப்பந்திலும்,பாதுகாப்பு சபையிலோ அல்லது பொதுச் சபையிலோ, ஈழத்தமிழர் விடயம் உத்தியோக ரீதியிலோ அல்லது உத்தியோகம் அற்ற ரீதியிலோ பதிவாகவில்லை என்பதே உண்மை.

1978ம் ஆண்டு ஓக்டோபர் 5ம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் என்ன நடந்தது என்பதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அன்று சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சாரான, திருஏ.சி.எஸ். கமித் பொதுச் சபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட பொழுது, பிரித்தானிய வழங்கறிஞாரான, காலம்சென்ற திரு கிருஸ்ண வைகுந்தவாசன் என்பவர், திரு கமித்எழுந்து உரையாற்ற வருவதற்கு முன்னர், தமிழீழ மக்களது இன்னல் பற்றி மிக சுருக்கமாக யாருடைய அனுமதியுமின்றி உரையாற்றியிருந்தார். இவரது உரை கீழேகொடுக்கப்பட்டுள்ளது. அவ் கால பகுதியில், சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்கவே, சிறிலங்காவின் உதவி வெளிநாட்டு அமைச்சராககடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு கிருஸ்ண வைகுந்தவாசன் பொதுச் சபையில் ஆற்றிய உரையாற்றிய என்பது, தமிழீழ மக்களது புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்களால்எவ்வளவு தூரம் தமது இனத்திற்காக செயலாற்ற முடியும் என்பதற்கான நல்ல ஊதாரணம். இவர்கள் கடமை உணர்வுடன் தாமாக முன்வந்து, அழிந்து கொண்டிருக்கும் தமதுதேசியத்தை காப்பாற்ற செயலாற்ற வேண்டும். இவ் வேண்டுகோள் மூலம், நான் யாரையும் முறையற்று, சட்டங்களிற்கு எதிராக இயங்குமாறு வேண்டவில்லை. உண்மையில்தமிழீழ மக்களது புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்களால் தமது மக்களிற்கும் தமது தாயாக பூமிக்கும் எவ்வளவோ செய்ய முடியும்.

இளைஞர்களுடன் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. இவர்கள் ஐ.நா.வின் வேலை திட்டங்களை சரியான முறையில் கல்வி கற்று செயலாற்ற வேண்டும். கேள்வி ஞானத்தில்வேலை திட்டங்களை முன்னெடுப்பது தவறான அணுகுமுறை.

உரியவர்கள் முன்வராத காரணத்தினால், உணர்ச்சிவச அணுகுமுறைகள் தவறாண முறையில் இடம் பிடித்து, இன்று ஜெனிவாவில் ஐ.நா. வேலை திட்டங்கள் யாவும்நாசமாக்கப்படுகின்றன. இதனால், எமது தாயாக நிலத்தில், அதாவது இலங்கைதீவின் வடக்கு கிழக்கில், சிறிலங்க அரசினால் மேற்கொள்ளப்படும் – சிங்கள குடியேற்றங்கள்,சிங்களமயம், பௌத்தமயம், இராணுமயம் யாவும் பெரும் வெற்றியுடன் நடைபெறுகின்றது.

இன்று வடக்கு கிழக்கு, வடக்காகி, வடக்கு யாழ்ப்பாணமாகி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்கப்படுகின்றனர். இவ்உண்மையை, புலம் பெயர் தமிழ் மக்கள் யாவரும் mwpe;jpUf;f வேண்டும்.

உண்மையை கூறுவதனால், ஜெனிவாவிற்கு வருகை தரும் சிலர், தமது அரசியல் லாபங்களிற்காகவே வருகை தருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களிற்கோ,தமிழினத்திற்கோ எந்த நன்மையுமில்லை.

நாம் சிறிலங்கா அரசின் தொழில் சார் ராஜதந்திரிகளை எதிர்கொள்ள வேண்டுமானால், எமக்குள் அதற்கு ஏற்ற தகமை உள்ளவர்கள் முன்வரவேண்டும். இப்படியானகாரணங்களிற்காகவே, பெரும் ஊதியம் சம்பாதிக்க கூடிய நவீன தகவல் செயல் முறையிலிருந்து விலகி, 1990ம் ஆண்டிலிருந்து, மனித உரிமை சர்வதேச ராஜதந்திரம் போன்றதுறைசார் கல்வியை கற்று கொண்டேன்.

இன்று பாலஸ்தீன மக்களுடைய அரசியல் பிரச்சனைகளும், தமிழீழ மக்களுடைய பிரச்சனைகளும் முடிவின்றி தொடர்வதற்கான காரணிகளில் ஒன்று, அரசியல் அணுகுமுறையில், முறைசார் பரப்புரைகள் மேலோங்குவதற்கு பதிலாக, உணர்ச்சிவச செயற்பாடுகள் இடம் பிடித்துள்ளமையே.

நாம் உலகளாவிய ரீதியில் யாதர்த்தங்களை ஆராயுமிடத்து, சிறிலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சீனாவும், ரசியாவும் பாதுகாப்பு சபையில் அனுமதிக்கமாட்டார்கள் என்பது எந்தவிதத்திலும் உண்மை அல்லா. சீனாவும், ரசியாவினது நெருங்கிய நட்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வேளையில், இவ்விரு நாடுகளும் மௌனம்சாதித்துள்ளமையை நாம் காணக்கூடியதாகவுள்ளது. சர்வதே கீறிமினல் நீதிமன்றத்தினால், சுடான் ஜனதிபதி மீது சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கபட்டமை இதற்கு ஓர் நல்லாஊதரணமாகும்.

அதே இடத்தில், அன்றைய சோவியத் யூனியனான தற்போதைய ரசியவே, சிறிலங்காவின் ஐ.நா. அங்கத்துவத்திற்கு எதிராக, தனது ‘வீற்ரோ’ அதிகாரத்தை மூன்று தடவை – 1948ம்ஆண்டும், 1949லும் பாவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் யாதர்தங்கள் உண்மைகளை ஆராய்ந்து சரியான செயற்திட்டங்களை முயற்சியாது, சாட்டு போக்குகளை கூறி, காலத்தை கழிப்பதினால், எமது அரசியல் தீர்வுஎன்பது, 1948லிருந்து ஒரு அங்குலம் கூட, விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையில் நகரவில்லை என்பதே உண்மை.

இன்று யாவருக்கும் ஐ.நா. ஜெனிவா என்பதை நன்றாக தெரிந்திருப்பதற்கு, அதற்கான நல்ல அத்திவாரமே காரணமாகவுள்ளது. யூலை 1983 இன கலவரத்தை தொடர்ந்துஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்ற ஈழத் தமிழ் முன்னோடிகளிற்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். இதனை தொடர்ந்து, நாம் இரவுபகலாக ஐ.நா. மனித உரிமைக்கான வழிமுறைகளை அணுகி ஆயராத உழைத்தாதன் மூலம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு மட்டுமல்லாது, அரச பயங்கரவாதத்திற்குஇரையான சிங்கள, முஸ்லீம் மக்களிற்காகவும் வேலை செய்தோம்.

இன்று எமது அரசியல் அணுகுமுறை என்பது, 1977ம் ஆண்டு பொது தேர்தலின் பொழுது, தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு வாழ் மக்களினால் கொடுக்கப்பட்டஆணையை ஓரம் தள்ளிவிட்டு சில்லறை அரசியல் லாபங்களிற்காக, தனி நபர் விரும்பத்தின் அரசியல் தீர்வுகளின் திசையை நோக்கி செல்கிறது. இவை யாவும், மறுபட்டசிறிலங்கா அரசுகளினாலும், அவர்களது பரப்புரையாளரினாலும் திறம்பட திட்டமிடபட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இன்று புலம் பெயர் தமிழர் சிலர், நிரத்தர அரசியல் தீர்விற்கு, சர்வதேச சமூதாயத்தின் ஒப்புதலுடனான ஆபிப்பிராய வாக்கெடுப்பை வேண்டி நிற்கின்றனர். இவ் விடயத்தில், நாம்சர்வதேச சமூதாயம் என கூறினாலும், ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையையே வேண்டி நிற்கிறோம் என்பதே யாதார்த்தம். காரணம், ஒரு நாட்டில், அவ் அரசின் முடிவுதவிர்ந்த வேறு ஏதாவது ஒரு ஆபிப்பிராய வாக்கெடுப்பு நடக்குமானால், அதை ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையினலே முடிவு செய்ய முடியும்..

ஆகையால் இவ்விடயத்தில் நாம் சில யாதார்தங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் பற்றி, ஐ.நா. பொதுச் சபை,ஐ.நா. பாதுகாப்பு சபையில், இன்றுவரை எவ்வளவு தூரம் பேசப்பட்டுள்ளது? உண்மையை பேசுவதனால், இன்று வரை அங்கு அப்படியொன்றும் பிரயோசனமான முறையில்நடைபெறவில்லை. 2006ம் ஆண்டு போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கூட, உத்தியோக பற்றற்றா சில சம்பசனைகளே, ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கத்துவநாடுகளிடையே நடைபெற்றது என்பதே உண்மை. இவ் நிலையில், தமிழீழ அரசியல் நிரத்தர தீர்விற்கு, சர்வதேச சமூதாயத்தின் ஆதரவுடன் ஆபிப்பிராய வாக்கெடுப்பு என்பது,நடைமுறைக்கு சாத்வீகமான விடயமா?

எரீத்தீரியா, கிழக்கு தீமூர், தென் சுடான், கோசவா போன்ற நாடுகள் வருட கணக்கில், மாத கணக்கில், நியுயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையில்கடும் பரப்புரை வேலைகளை செய்து, தமது இலக்கை அடைந்தார்கள். ஆனால் இன்று வரை ஈழத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் யாரும், ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா.பாதுகாப்பு சபையுடன் எந்த தொடர்ச்சியான வேலை திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. ஆகையால் ஆபிப்பிராய வாக்கெடுப்பு என்பதும் பாதிக்கப்பட்ட மக்களிற்குகாட்டப்படும் இன்னுமொரு கானல் நீரே.

இந்தியா

எது என்னவானாலும், இந்தியாவின் பங்களிப்பு என்பது, ஈழத் தமிழர் விடயத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. விசேடமாக எமது ஐ.நா.செயற்பாடுகளிற்கு இந்தியாவின்உதவியின்றி நிட்சயம் பயணிக்க முடியாது. எனது அனுபவத்தில், பொறுப்பு கூறல் என்று வரும் வேளையில், ஜெனிவாவில் இந்தியாவின் குரல் மிகவும் தளர்ந்த நிலையில்காணப்படலாம், ஆனால் எமது அரசியல் தீர்வு அல்லது எமது அரசியல் தீர்விற்கான நியூயோர்க் செயற்பாடு என்ற நிலையில் இந்தியா நிட்சயம் ஈழத் தமிழர்களிற்காக குரல்கொடுத்தே ஆக வேண்டிய நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு ஓக்டோபர் 21ம் திகதி, இந்தியாவின் பிரதிநிதியாக தமிழ் நாட்டின் அமைச்சர் திரு பண்டுருட்டி ராமச்சந்திரன் அவர்கள், ஐ.நா.பொதுசபையின் அரசியல் குழுவில்,சிறிலங்காவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்துள்ள அகதிகள் பற்றி உரையாற்றினார்.

1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி, இந்தியாவின் பிரதிநிதியான திரு மீர்த்தா என்பவர், ஐ.நா.பொதுசபையின் 39வது கூட்டத் தொடரில் மீண்டும் சிறிலங்காவிலிருந்துஇந்தியாவிற்குள் வந்துள்ள அகதிகள் பற்றி எடுத்துரைத்தார்.

இவை மட்டுமல்லாது, 1983, 1984, 1985ம் காலப் பகுதிகளில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, உப-ஆணை குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகள் தமிழர்விவகாரம் பற்றி உரையாற்றியிருந்தனர் என்பது சரித்திரம்.

ஆகையால் இந்தியாவின் விடயத்தில், மிகவும் ஆழமான சிந்தனையும், பிரயோசனமான அணுகு முறையும் முக்கியமானவை என்பதை ஈழத் தமிழர் அறிந்திருக்க வேண்டும்.

சர்வதேச அணுகுமுறை அல்லது சர்வதேச ராஜதந்திரம் என்று வரும்பொழுது, சில ஈழத் தமிழர்; ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். போட்டி மனப்பான்மையின் அடிப்படையில்ஏதாவது ஒன்றை செய்வதாக எண்ணி, தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

உலக அரசியல், சர்வதேச மூலோபாயத்தின முக்கியத்துவத்தின் அடிப்படையில், இந்தியா ஒரு பொழுதும் இலங்கைதீவின் வடக்கு கிழக்கை அலட்சியம் பண்ண முடியாது.விசேடமாக – கலை, கலாச்சாரம், மொழி, சமயம் ஆகியவற்றில் ஒத்த கருத்தின் அடிப்படையில், தமிழர்களது தாயாக பூமியான தமிழீழத்தை இந்தியா என்றும் தனதுகண்கணிப்பிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் உண்டு.

இது தவறும் பட்சத்தில், இலங்கைதீவின் வடக்கு கிழக்கிலிருந்து, என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு வெளிநாட்டு சக்தி, இந்தியா மீது ஏவுகணை பீரங்கி தாக்குதல்களை நடாத்துவதுமட்டுமல்லாது, இப் பிரதேசங்களிலிருந்து, இந்தியாவில் பிரிவினை வேண்டி போராடும் சக்திகளிற்கு ஆயுதங்கள், யுத்த தளபாடங்களை விநியோகிக்கும். இவ் ஆபாயகரமானயாதார்த்தை, இந்தியாவின் ஆலோசகர்கள் கவனத்தில் கொள்ள தவறும் பட்சத்தில், இந்தியா பாரீய ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்தியாவின் முடிவெடுப்பாளர்கள் என்றும்தமது முடிவுகள் தவறு என நிருபிக்கப்பட்ட பின்னர் தவிப்பது வழக்கம்.

முடிவுரை

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில், இரு தொழில் சார் அமைப்புக்கள் உள்ளதாக அறிகிறேன். மியோட், அதாவது தமிழ் மருந்துவ நிறுவனம், மற்றையதுதமிழ் வழங்கறிஞர் சங்கம். இதற்கு மேலாக, தமிழ் பொறியியாளர் அல்லது கணக்காளர் அல்லது வேறு துறை சார்ந்த அமைப்புக்கள் இருப்பின் அவற்றை இணைந்து கொள்ளவும்.இவ் தொழில்சார் அமைப்புக்கள் சங்கங்கள், அழிந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியத்திற்கு பெரிதாக உதவ முடியும். மற்றைய இனத்தவர்களது உரிமை போராட்டங்களை நாம்அவதானிக்குமிடத்து, அவ் இனங்களினது மருந்துவ காலாநிதிகளும், சட்ட வல்லுனர்களும் தமது இனத்தின் அரசியல் தீர்விற்கு பெரிதாக அர்பணிப்பதை காணமுடிகிறது. எமதுஅரசியல் பிரச்சனை என்பது ஓர் நீண்ட காலம் மட்டுமல்லாது, மிக ஆளமான காரணிகளை அடித்தளமாக கொண்டுள்ளது. ஆகையால் சமூக மனிதபிமான உதவிகள் மட்டும்,எமது இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.

உலகளாவிய ரீதியில் திகழும் ஈழத் தமிழரது தொழில் சார் அமைப்புக்கள் தம்மை சர்வதேசமயப்படுத்த வேண்டும். அதாவது, இவ் அமைப்புக்கள் தனித்து தமக்குள் மட்டும்செயற்பாடுகள், விழாக்கள், விருந்துகள் நடாத்தாது, சர்வதேச ரீதியாக தமக்கு உடந்தையான சங்கங்கள் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பாரீயளவில் செயற்படவேண்டும். இவ் ரீதியான வேலைகள், நிட்சயம் எமது தேசிய விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக அமையும்.

இறுதியாக, ஐ.நா.ஜெனிவா விடயத்தில் சில அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை முன் வைக்க விரும்புகிறேன்.

தற்பொழுது ஈழத் தமிழர்கள் யாவரும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் தொடரில், என்ன நடைபெறவுள்ளது என்பதில்ஆர்வமாகவுள்ளனர்.

மிக சுருக்கமாக கூறுவதனால், நல்லாட்சி என கூறப்படும் தற்போதைய பித்தலாட்டம் நிறைந்த சிறிலங்கா அரசு, தம் மீது ஐ.நா.மனித உரிமை சபையினால் 2015ம் ஆண்டு ஒப்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் போதாது என்பதை நிட்சயம் முன் வைப்பார்கள். இதனுடைய உண்மை நோக்கம்,காலஅவகாசத்தை பெற்று, தமிழர் தாயாக பூமியின் மிகுதி இடங்களிலும் – சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயத்தை முன்னெடுப்பற்காகவே. ஆகையால், நாம் இவ்விடயத்தில்திட்டமிட்டு செயற்பட முடியாத நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஓர் மாபெரும் ஏமாற்றத்தையே நாம் ஜெனிவாவில் சந்திக்க நேரிடும்.

முதலாவதாக நாம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அரசின் கண்துடைப்பு வேலைகள் யாவும், சர்வதேசத்தை திருப்தி படுத்துவதற்காகவே என்பதை,ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும். முடியுமானால், இவரை நேரில் சந்தித்து விடயங்களை விளக்க வேண்டும். இல்லையேல் உண்மை நிலைகளை மிக சுருக்கமாக மனுக்கள்மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இரண்டாவதாக, நாம் இன்று வரை ஐ.நா.மனித உரிமை சபையில் வெற்றியாக செய்த வேலைகள் யாவற்றிற்கும், எமக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களான – சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்கணிப்பகம், சர்வதேச நெருக்கடி குழு போன்ற அமைப்புகளை, தெற்கில் உள்ள நேர்மையான மனிதஉரிமை செயற்பாட்டாளர்களையும், சில மேற்கு நாட்டு செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்த பரப்பரையை மேற்கொள்ள வேண்டும்.

இதில் சில மேற்கு நாட்டு செயற்பாட்டாளர்கள், தாம் விரும்பியவற்றை எம்மீது திணிக்க முற்படும் வேளைகளில், இவர்கள் யாரின் பின்ணனியில் செயற்பாடுகிறார்கள் என்பதைஅறியாது, இவர்கள் கூறுவதை ஏற்றுகொள்ளவோ, தவிர்கவோ முடியாது.

மூன்றவதாக, ஐ.நா.மனித உரிமை சபையின் முக்கிய நாடுகளான – அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, இவற்றுடன் தென் (லத்தின்) அமெரிக்கா,ஆபிரிக்க, ஆசிய நாடுகளின் முக்கிய நாடுகளை நாம் எமது பரப்புரையில் உள்ளாக்க வேண்டும்.

அத்துடன், புலம்பெயர் வாழ் ஈழதமிழர்கள் வாழும் சகல நாடுகளிலும் உள்ள வெளிநாட்டு அமைச்சுக்களுடன் தொடர்புளை ஏற்படுத்தி அவர்களிற்கு நிலைமைகளை விளக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் – திரு அன்ரோனியோ குற்ரேறஸ், இலங்கைதீவின் முதலாவது காலோனித்துவ நாடான போத்துக்கலை சார்ந்தவர்.ஆகையால், திரு அன்ரோனியோ குற்ரேறஸ் இலங்கைதீவில் உண்மை சரித்திரத்தை நன்கு அறிந்தவர். அது மட்டுமல்லாது, இவர் அகதிகளிற்கான ஐ.நா.ஆணையாளராக பதவிவகித்த வேளையில், சிறிலங்காவில் கடுமையான யுத்தம் நடைபெற்ற 2006ம் ஆண்டு யூலை மாதம், சிறிலங்காவிற்கு சென்று, அங்கு சிறிலங்கா அரசையும், தமிழீழ விடுதலைபுலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தவர்.

ஆகையால், திரு அன்ரோனியோ குற்ரேறஸ் பதவியேற்கும் வேளையில், நாம் யாவரும் இவருக்கு வாழ்த்து செய்திகளை அனுப்புவதுடன், இலங்ககைதீவில் – பொறுப்புகூறல்,நல்லிணக்கம் ஆகியவற்றில் ஐ.நா.வின் பங்கை சுருக்கமாக நினைவுபடுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் போத்துக்கல் ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது.

இதேவேளை, தமிழீழ மக்களிற்கு நீதியுடனான ஓர் நிரந்தர அரசியல் தீர்வையும், பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியையும் பெற்று கொள்வதற்கு, எமக்கு உதவிய – ஐரோப்பியயூனியன், ஐரோப்பிய பாரளுமன்றம், பொதுநாலவாய அமைப்பு ஆகியவற்றுடனும் இணைந்து நாம் பயணிக்க வேண்டும்.

நன்றி

1978ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 5ம் திகதி, காலம்சென்ற பிரித்தானிய வழங்கறிஞர் திரு கிருஸ்ண வைகுந்தவாசன் அவர்கள், ஐ.நா.பொதுச் சபையில் ஆற்றிய உரை.இக் கூட்டத்திற்கு கொலம்பியாவின் ஐ.நா.பிரதிநிதி திரு லீவியனோ தலைமை வாகித்தார்.

“தலைவர்! உலகத் தலைவர்களிற்கு!

தமிழீழம் போன்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், இது போன்ற உச்ச மன்றத்தில் தமது பிரதிநிதித்துவத்தை முன்வைக்க முடியாவிடில், அவர்கள் எங்கு செல்வது?

எனது பெயர் கிருஸ்ண? இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் இரண்டரை மில்லியன் மக்களை கொண்ட தேசிய இனமான தமிழீழத்திலிருந்து வருகை தந்துள்ளேன்.

சிறிலங்காவில் சிங்கள அரசு, தொடர்ந்து தமிழ் தேசியத்தை, இன அழிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது.

நாம் பிரிந்து வாழ்வதற்கான சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்துள்ளோம்.

தமிழ் மக்களுடைய பிரச்சனை என்பது, இந்தியா இந்து சமூந்திர பிராந்தியத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆபாயகரமான நிலையை உருவாக்குகிறது.

சிறிலங்காவின் விடயத்தில் உலக தலைவர்கள் முன் வந்து ஓர் தீர்வை காண தவறும் பட்சத்தில், இது பாலஸ்தீனருடைய, சைபிரஸினுடைய பிரச்சனை போல் உருவாகும்.

நாங்கள் உங்கள் உதவியை வேண்டிநிற்கிறோம். மிக்க நன்றி

அனுமதியின்றி உரையாற்றியதற்கு மன்னிப்பு கோருகிறேன். தமிழீழம் நீடுழி வாழ்க என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts