- Wednesday
- June 17th, 2026
இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, முல்லைத்தீவு ராணுவத் தலைமையகத்திற்கு முன்னாள் கேப்பாப்பிலவு மக்கள் கடந்த...
எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படினும் இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மனித உரிமை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தையோ,...
இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் விசேட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தம், இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுள் சிலர் நிரந்தர முகவரிகளின்றி இடம்பெயர்ந்தவர்களாகவும் அகதிகளாகவும் தொடர்ந்தும் வசித்து வரும் அவலநிலைமை நாட்டில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இவர்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது....
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். மாவட்டத்தில் முதலாவது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று 11 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்துள்ளனர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெற வேண்டும், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித...
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களில் சிலரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேப்பாப்புலவிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்களது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து...
அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த...
ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 238 பேருக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். கல்வியமைச்சில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. கல்வி அமைச்சர்...
பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது. கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த...
சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் உள்ளதாக நம்பப்படும் இலங்கையர்கள் குறித்த விபரம் வௌியாகியுள்ளது. தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத் தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ் மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர மூன்றாவது பொறியியலாளர்...
வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர் பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் அதன் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கூட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட போதே...
மட்டக்களப்பு – நாவற்குடா – மாதர் வீதியில் வசித்துவந்த 4 வயது சிறுவன் ஒருவர், தனது வளர்ப்புத் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த தாய் நூலகமொன்றில் பணியாற்றுபவர் என...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச மட்டத்திலான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அமர்வின் போது, அரசியலமைப்பை...
புன்னாலை கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் பெயரை , கொள்ளை சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த V அறிக்கையில் குறிப்பிடவில்லை என சாட்சியம் அளிக்கப்பட்டு உள்ளது. சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை...
புதிதாக சுற்றோட்டத்துக்கு விடப்படவுள்ள 1 ரூபா நாணயக் குத்தியினதும் 5 ரூபா நாணயக் குத்தியினதும் உலோகங்களை துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 1 ரூபா மற்றும் 5 ரூபா நாணயக் குத்திகளின் பித்தளை முலாமிட்ட (தங்க நிறம்) மாற்றப்படவுள்ளது. இதேவேளை 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பில்...
வெள்ளவாய, கொடவெஹரகள பகுதியில் வைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் வெள்ளவாய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் முல்லை தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பகுதியை சேர்ந்தவர்கள்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (15) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும், எந்தவொரு மின்சாரத் தடையும் நாட்டில் ஏற்பட மாட்டாது எனவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அச்சபை அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 3 பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவர்களிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? என தமிழ் அரசியல் தலைமைகள் கேட்கும் நிலை வரலாம். எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் முதுகை தடவி உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? என ஈ.எம்.பி நாகநாதன் என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட வரலாறுகள் உள்ளது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாணசபை எதிர்கட்சியில் உள்ள சிங்கள உறுப்பினர்களை...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை...
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது...
Loading posts...
All posts loaded
No more posts
