Ad Widget

யாழ். மாவட்டத்தில் முதலாவது தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழ். மாவட்டத்தில் முதலாவது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று 11 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெற வேண்டும், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts