ஸ்ரீலங்கா பணியாளர்களை காப்பாற்ற விசேட குழு; வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை...

புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாதச் செயற்பாடு! : ஐரோப்பிய நீதிமன்றம்!

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது...
Ad Widget

10 இராணுவ வீரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு

அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதியிலிருந்து, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரு பொதுமகன்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 5 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களையும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை உத்தரவிட்டார். கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...

வடமாகாணசபை நியமனங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்!

வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் விசேட அமர்வொன்று, நேற்று(14) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “வடமாகாண சபையால் வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பிலும் வடமாகாண உயரதிகாரிகள் மீதும்,...

முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரருக்கு விளக்கமறியல்

கொழும்பில் உள்ள தாமரைத் தடாக வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சுத்திகரிப்பு வேலையைச் செய்துகொண்டு மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரே இவ்வாறு விளக்கமறியலில்...

பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்த ஜோடி கைது!

வவுனியா நகரத்தில் பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒரு ஜோடி உள்ளிட்ட மூவரை, ஹெரோய்னுடன் நேற்று (14) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு முன்பாக, டயர் பட்டறை நடத்தும் போர்வையில், நீண்டகாலமாக இவ்வாறு ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை...

யாழில் திருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் நன்னடத்தை பாடசாலைக்கு

அச்சுவேலி தம்பாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சிறுவர்கள் நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடந்த 09ம் திகதி தம்பாலை டச்சு றோட் பகுதியில்...

ஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும்

ஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்றயதினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அமைப்புக்கள் வருகை தந்திருந்தன. இந்நிலையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட...

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் நோர்வே பல்கலைக்கழகத்துக்குமிடையில் உடன்படிக்கை

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கும் நோர்வேயின் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்துக்கும் (எச்.எல்.வி) இடையிலான இணை ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே துணைத் தூதுவர் குநூட் நைவூல்ட் பிரதம விருந்தினராகக்...

சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன்

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்தள்ளார்.

 ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். 

எனினும் இந்த விடயத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர்...

பொலிஸாருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்

கணவன், மனைவி மீது கோடாரியால் வெட்டியதால் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி...

சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : 3 மாணவர்கள் கைது

மாலபே சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கொழும்பில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன், லோட்டஸ் வீதிக்கு அருகில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமின்றி நீதிமன்ற தடையுத்தரவையும் மாணவர்களிடம் காண்பித்துள்ளனர். எனினும் நீதிமன்ற...

வெள்ளை வானில் கடத்தப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்: குற்றப்புலனாய்வு பிரிவு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. குறித்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு...

பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி! அழகுக்கலை நிபுணர் கைது!

களுத்துறை , அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக கருதப்படும் அழகுக்கலை நிபுணர் மற்றும் அவரிடம் மாணவர்களை அழைத்துச் சென்ற நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாணவர்களின்...

கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் மீட்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்...

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டியவாறு பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரில் அரச நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று 21 ஆவது நாளாகத் தொடரும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடுக்கப்பட்ட எமது தொழிலுரிமை எனும் தலைப்பில்...

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண...

பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்தருக்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1,652 இலட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (வியாழக்கிழமை) நாளைமறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை...

தடம் மாறும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டும்

தடம் மாறிச் செல்லும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கடமையென வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வி துறையையும் வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார்?

இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என...
Loading posts...

All posts loaded

No more posts