Ad Widget

பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்த ஜோடி கைது!

வவுனியா நகரத்தில் பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒரு ஜோடி உள்ளிட்ட மூவரை, ஹெரோய்னுடன் நேற்று (14) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு முன்பாக, டயர் பட்டறை நடத்தும் போர்வையில், நீண்டகாலமாக இவ்வாறு ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்த ஜோடியின் வீடானது, போதைப்பொருட்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கொழும்பிலிருந்தே, பெருந்தொகையில் போதைப்பொருட்களை கொண்டுவந்து, அவ்வீட்டில் வைத்து, சிறுசிறு பக்கெற்றுகளாகப் பொதிசெய்து, பக்கற்றொன்று 2,000 ரூபாய்க்கு மேல், வவுனியாவில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts