குளவிகள் கொட்டுக்கு இலக்கான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மீசாலை ஆலடிப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளின் போது, குளவிகள் கொட்டியதில் 10 பேர் பாதிக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (04) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மையினர் மீதான அடக்குமறைகளை வெளிப்படுத்துகிறது

'தமிழ் மாணவன் மீதான கொடூரத்தாக்குதல் சம்பவமானது சிறுபான்மையின மக்கள் மீது இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். (more…)
Ad Widget

விளம்பர நடவடிக்கையால் நல்லூரானுக்கு பாதிப்பு – ஆலயநிர்வாகத்தினர்

நல்லூர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் அரசியல் , வியாபார விளம்பர நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஆலயத்தினர் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

விபத்து : வயோதிப பெண் படுகாயம்

வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அப் பெண் படுகாயமடைந்துள்ளதுடன் (more…)

அதிகாரிகள் விபரங்களை தருவதில்லை : முதலமைச்சர் சி.வி

வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வவுனியா மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக பல அலுவலர்களிடம் விபரங்கள் கேட்டிருந்தும் அதற்கான பதில் அளிக்கப்படாமலேயே இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். (more…)

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். (more…)

காணாமல் போனோர் பிரச்சினை: கூட்டத்தைக் கலைத்த பிக்குகள்

வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் நேற்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். (more…)

வாழ்வாதர உதவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை

தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கப்படும் உதவிகளை சிறந்த முறையில் அம்மக்கள் பயன்படுத்துவதில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக குடும்ப விவரங்களை மீண்டும் திரட்டுகின்றனர்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீண்டும் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். (more…)

தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு செப்ரெம்பர் மாதம் வவுனியாவில்!

65 வருட காலமாக வடகிழக்கு மக்களின் தாய்க் கட்சியாக இருந்து செயற்பட்டுக்கொண்டு வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் (more…)

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்று இன்று தீர்ப்பு

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. (more…)

பாடத்துடன் தொடர்புடைய வேலைகள் பட்டதாரிகளுக்கு கிடைக்கவில்லை – ச.லலீசன்

பட்டதாரியாகிவிட்டடால் ஏதோவொரு வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலேயே இன்று பலர் நுண்கலைப் பாடங்களை பயில்கின்றனர். (more…)

பல்கலை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி, உயர்க் கல்வி அமைச்சர்க்கு டக்ளஸ் கடிதம்

சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)

யுத்தம் எமக்கு மனநோயாளிகளையும் கொடுத்துச் சென்றுள்ளது; வடக்கு சுகாதார அமைச்சர்

இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்திலே தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)

உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது,ஆணைக்குழுவின் தலைவர்

போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகம. (more…)

தற்கொலைக்கு முயன்ற சிறுவன் காப்பாற்றப்பட்டான்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர். (more…)

வறுமை காரணமாக வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

வறுமையின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஐ.நா.விசாரணைக்கு ஆதரவு வழங்க மெக்ரே தயார்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் (more…)

த.தே.கூ.வை இந்தியா வற்புறுத்தவில்லை – சுரேஷ் எம்.பி

'இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு. மனித உரிமை ஆணைக்குழு செல்ல முடிவு

சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக நேற்று மாலை 4 மணியளவில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் அப் பகுதி மக்கள் கூடி கலந்துரையாடினர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts